/indian-express-tamil/media/media_files/aeS3W5CPApuJxMyEEUxm.jpg)
தற்போதைய வானிலை மாற்றத்தால், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு ஏற்படும். இந்நிலையில் இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நெல்லிக்காய் தீர்வாக உள்ளது. இதை நாம் பச்சையாக, ஊறுகாய், அல்லது பொடி செய்து சாப்பிடலாம்.
3 நெல்லிக்காய்யை எடுத்துக்கொண்டு அதை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்ககூடாது. தற்போது அரைத்ததை பிழிந்து, நெல்லிக்காய் சாறை எடுக்க வேண்டும்.
இதை நாம் தினமும் குடிக்க வேண்டும். இது நமது தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும். கூந்தல் உதிர்வதை தடுக்கும். இளநரை ஏற்படாமல் தடுக்கும். இந்த நெல்லிக்காய் சாறு சருமத்தை பொலிவாக வைத்துகொள்ள உதவும். சருமம் வரட்சி அடையாமல் காணப்படும். மேலும் ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.
அஜீரணம், வயிற்று உப்புதல், வாயுத்தொல்லையிலிருந்து காப்பாற்றும். இது நன்றாக செயல்படும் ஜீரண மண்டலத்திற்கு கூடுதல் உதவியாக இருக்கிறது.
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளதால், சுவாச ஆரோக்கியத்திற்கு உதவும். இது இருமல் மற்றும் தொண்டை வலியை போக்கும். இதில் வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி நமது மனநிலையை சீரா வைத்திருக்கும். மன அழுத்தத்திலிருந்து நம்மை காப்பற்றும்.
உடல் எடை குறைக்க உதவும். உடல் எடை அதிகரிக்க, 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை, 1 டீஸ்பூன் நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 5 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.