என்ன செய்தாலும் பீரியட்ஸ் வலி போகவில்லையா? இதை மட்டும் 3 நாள் சாப்பிடுங்க!
"கடுமையான செயல்பாடுகள் வாதத்தை மோசமாக்கும், வலி மற்றும் இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என்று ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா கூறினார்.
"கடுமையான செயல்பாடுகள் வாதத்தை மோசமாக்கும், வலி மற்றும் இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என்று ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா கூறினார்.
பல பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் குமட்டல், வீக்கம், பிடிப்புகள் மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள். இதற்கு பல தீர்வுகள் இருந்தாலும், உடலைப் புரிந்துகொண்டு, அதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து திறமையாகச் சிகிச்சையளிப்பதற்கு நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
Advertisment
மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஆயுர்வேதத்தின்படி மாதவிடாய் வலி பற்றி விரிவாக விளக்கினார், மேலும் அதை நிர்வகிக்க சில எளிய குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.
“ஆயுர்வேதத்தின்படி மாதவிடாய் கட்டம் என்பது ஒரு வாதம் ஆதிக்கம் செலுத்தும் கட்டமாகும். வாதம் என்பது கீழ்நோக்கி நகர்கிறது, இது மாதவிடாய் இரத்த ஓட்டத்திற்கு காரணமாகும். நாம் கடினமான செயல்களைச் செய்யும்போது, அது வாதத்தை மோசமாக்குகிறது மற்றும் வலி மற்றும் இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என ஆயுர்வேத நிபுணர் கூறினார்.
மருத்துவர் வரலக்ஷ்மியின் கூற்றுப்படி, மாதாந்திர சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு வழக்கத்தை பராமரிப்பது மற்றும் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம்.
Advertisment
Advertisements
"அதிக இரத்தப்போக்கு, தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற’ மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளால் (PMS) நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், கடுமையான உடற்பயிற்சிகள் மிகவும் பொதுவான காரணம்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமான மாதவிடாய்க்கான அறிகுறிகள்
* பிரகாசமான சிவப்பு நிறம்
* கறை இருக்காது
* துர்நாற்றம் இருக்காது
உங்கள் மாதவிடாயின் போது லேசான உடற்பயிற்சி உங்களுக்கு நிவாரணம் பெற உதவும்
மாதவிடாய் வலியை சமாளிக்க உதவும் குறிப்புகள்
லூட்டல் கட்டம் மற்றும் மாதவிடாய் காலத்தில் உடல் அழுத்தத்தை குறைக்கவும்.
உங்களுக்கு நல்ல குடல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை பருகவும்.
தண்ணீரில், சிறு மஞ்சள் உருண்டைகளை (பட்டாணி அளவு) செய்து, மாதவிடாய் தொடங்கிய முதல் நாள் மூன்றாம் நாள் வரை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஓய்வு எடுக்கவும், அரிசி சாதம், சூப்கள் மற்றும் வதக்கிய காய்கறிகள் போன்ற எளிய உணவுகளை உண்ணுங்கள்.
தீவிர அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை பெறவும் அவர் பரிந்துரைத்தார்.
"மாதவிடாய் வலியை நிர்வகிக்க இவை சில சிறந்த வழிகள் ஆனால் சில சமயங்களில் சமநிலையை மீட்டெடுக்க உதவும் ஒரு பயிற்சியாளரின் உதவி உங்களுக்குத் தேவைப்படும்,” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“