30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது அல்லது டிரெட்மில்லில் வேகமாக நடப்பது ஒரு நாளைக்கு 150 கலோரிகளை எரிக்கும். வாரத்தில் நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் 600 கலோரிகள் குறையும்.
ஆனால் இதற்கு எளிதான மாற்று இருக்கிறதா? நிச்சயமாக ரத்த தானம் செய்யுங்கள் என்றார் டாக்டர் சி சிவராம். நீங்கள் ரத்த தானம் செய்யும்போது, உங்கள் ரத்தத்தை மீண்டும் உருவாக்க உங்கள் உடல் 650 கலோரிகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவிடுகிறது.
எனவே, ஒருமுறை ரத்த தானம் செய்வது, ஒரு வார உடற்பயிற்சிக்கு சமம், என்று floridahealth.gov.in இன் படி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோ ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி டாக்டர் சிவராம் கூறினார்.
இருப்பினும், நீங்கள் வருடத்திற்கு 3-4 முறைக்கு மேல் ரத்த தானம் செய்ய முடியாது, எனவே அது உடற்பயிற்சிக்கு மாற்றாக இருக்க முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்த தானம் செய்பவர்களுக்கு "உயிர் காக்கும் ரத்தத்திற்காக" நன்றி தெரிவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக ரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
ரத்த தானம் செய்வது ஏன் உன்னதமான செயலை விட மேலானது என்பதை அறிந்து கொள்வோம்.
ரத்த தானம் எவ்வாறு உதவுகிறது?
குறிப்பிடத்தக்க வகையில், உயிர்காக்கும் செயலாக, ரத்த தானம் விபத்துக்களில் காயமடைந்தவர்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகள் அல்லது பரம்பரை ரத்தக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உதவுகிறது.
ரத்த தானம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் வழக்கமான அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் புதிய sterile கருவிகள் பயன்படுத்தப்படுவதால், நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று டாக்டர் அனிகேத் முலே கூறினார்.
டாக்டர் சிவராமின் கூற்றுப்படி, ஒரு முறை ரத்த தானம் செய்தவர்கள் அல்லது செய்யாதவர்களுடன் ஒப்பிடும்போது, வழக்கமாக ரத்த தானம் செய்பவர்களுக்கு கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன, இது இதய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.
ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பிளேட்லெட்டுகளை தானம் செய்வதன் மூலம் உங்கள் லிப்பிட் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யலாம், இது பிளேட்லெட்டுடன் லிப்பிட்களைக் கொண்ட பிளாஸ்மாவையும் நீக்குகிறது. இந்த வழியில் நீங்கள் ஒரு வருடத்தில் 24 நோயாளிகளுக்கு உதவலாம் மற்றும் உங்களுக்கும் உதவலாம்.
நீங்கள் 65 வயது வரை முழு ரத்தத்தையும், 60 வயது வரை ஒற்றை தானம் செய்யும் பிளேட்லெட்டையும் தானம் செய்யலாம், என்றார் டாக்டர் சிவராம்.
ரத்த தானம் செய்பவர்கள் ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து அளவைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மாரடைப்பு அபாயமும் குறையும் என்று டாக்டர் முலே மேலும் கூறினார்.
ரத்த தானம் எப்படி செய்வது?
ரத்த தானம் செயல்முறை எடை, நாடித் துடிப்பு விகிதம், ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின் சோதனை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் ஒரு சுகாதார பரிசோதனையை உள்ளடக்கியது.
இந்த அளவுருக்களில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் சரியான நேரத்தில் கண்டறிந்து சரிசெய்ய முடியும். ரத்த தானம் செய்யும் போது, நமது எலும்பு மஜ்ஜை நமது ரத்தத்தை புதிய உயிரணுக்களால் நிரப்பி, ஒருவரை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
எனவே, தொடர்ந்து ரத்த தானம் செய்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான இதயத்தைப் பெறுங்கள், டாக்டர் கீதா என் கவுடர் கூறினார்.
தானத்துக்கு முன் மற்றும் பின் என்ன செய்வது?
நீங்கள் ஆரோக்கியமான இரவு உணவை சாப்பிட்டு நன்றாக ஓய்வெடுத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தானம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளும் சிறந்த திரவம் தண்ணீர்.
ரத்தம் கொடுத்த பிறகு உங்கள் உடலுக்கு வளங்களை மீண்டும் வழங்குவது முக்கியம், தானத்தின் போது இழந்த அளவை உதவுவதற்கும் மாற்றுவதற்கும் நிறைய திரவங்களை, குறிப்பாக தண்ணீர் குடிக்கவும்.
சில மணிநேரங்களுக்கு, கடுமையான உடல் செயல்பாடு மற்றும் பளு தூக்குதல் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள். உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க, சத்தான சிற்றுண்டியை உண்ணுங்கள், என்று டாக்டர் சுனிதா கபூர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.