உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையை ஒட்டிய கோவைபுதூர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
தொடர்ந்து நடிகர் தாமுவுடன் இணைந்து ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகள் நடுவோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாமு மறைந்த நடிகர் விவேக் சுமார் முப்பந்தைந்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும்,இதில் சுமார் ஏழரை இலட்சம் மரக்கன்றுகள் மரமாக வளர்ந்திருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர்,மரம் வளர்வதற்கு தடையாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கையாள்வதில் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் பொதுமக்கள் குப்பைகளை கொடுக்கும் போது பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை சரியான வகையில் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
மேலும் ஐம்பாதயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டத்தை துவங்கும் வகையில் நடைபெற்ற இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் மற்றும் பிரபல நடிகர் தாமு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்