/tamil-ie/media/media_files/uploads/2023/07/Head-and-Neck-Cancer.jpg)
World Head and Neck Cancer Day
2014 ஆம் ஆண்டில் தலை மற்றும் கழுத்து புற்றுநோயியல் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 27 அன்று உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாளின் நோக்கமாகும்.
பிரிட்டிஷ் பல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் (HNC) 6,60,000 புதிய பாதிப்புகள் மற்றும் 3,25,000 இறப்புகள் நிகழ்கின்றன. மேலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உலகளவில் ஏழாவது பொதுவான புற்றுநோயாகும்.
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் என்று வரும்போது, முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானது. கவனிக்க வேண்டிய அறிகுறிகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வுடன் இருப்பது, இதை ஆரம்பத்திலே தடுக்க உதவும்…
எனவே, இந்த வகை புற்றுநோயைத் தடுக்க ஒருவர் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள நாங்கள் நிபுணர்களை அனுகினோம்.
காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
டாக்டர் தேஜிந்தர் கட்டாரியா கூற்றுப்படி, தலை மற்றும் கழுத்து புற்றுநோய் என்பது முக்கியமாக வாய், அண்ணம், குரல்வளை மற்றும் குரல்வளையின் பல்வேறு பகுதிகளில், உள் மேற்பரப்பில் இருந்து எழும் ஸ்குவாமஸ் செல் (squamous cell) புற்றுநோய்களாகும்
டாக்டர் ஷுபம் கார்க், இந்தியாவில் புகையிலையின் பரவலான பயன்பாடு காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் (HNC) பாதிப்புகள் அதிகரித்து வருவதாக விளக்கினார்.
பீடி, சிகரெட் அல்லது புக்கா, அதே சமயம் கான், ஜர்தா அல்லது பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை இரண்டும் வெவ்வேறு வகையான தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
கூர்மையான பற்கள், மோசமான பல் சுகாதாரம், மசாலாப் பொருட்களின் அதிக பயன்பாடு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் ஆகியவை மற்ற காரணங்களாகும் என்று அவர் கூறினார்.
டாக்டர் கட்டாரியாவின் கூற்றுப்படி, குணமடையாத புண் அல்லது உதடுகள், நாக்கு, கன்னங்களின் உள் மேற்பரப்பு, அண்ணத்தின் மேல் புண், டான்சில்ஸ் மீது வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு அல்லது மூக்கு அல்லது வாயிலிருந்து வலியற்ற ரத்தப்போக்கு ஆகியவை தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களின் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்…
சிகிச்சை மற்றும் தடுப்பு
/tamil-ie/media/media_files/uploads/2023/07/HNC.jpg)
வாயில் ஏதேனும் அசாதாரணம் இருந்தால், உடனடியாக ஒரு பல் மருத்துவர் அல்லது மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் கார்க் குறிப்பிட்டார், இதனால் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சை சிறப்பாக செய்யப்படுவதால், நோயை விரைவில் கண்டறிய முடியும்.
முக்கிய சிகிச்சையானது அறுவைசிகிச்சை ஆகும், அங்கு குறைந்தபட்சம் 0.5 செ.மீ அளவுள்ள சாதாரண திசுக்களின் பரந்த விளிம்புகளுடன் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்படுகிறது. இது கழுத்தின் நிணநீர் முனைகளை அகற்றும் ஒரு கழுத்து துண்டிப்புடன் சேர்ந்துள்ளது.
இருப்பினும், பாதிப்பு பெரியதாக இருந்தால் , காஸ்மெசிஸ் மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்த போதுமான மறுசீரமைப்பு தேவைப்படும், என்று அவர் கூறினார், பாதிக்கப்பட்ட பகுதி மிகப் பெரியதாக மற்றும் அகற்ற முடியாவிட்டால், பெரும்பாலான நோயாளிகளுக்கு கீமோதெரபியுடன் போஸ்ட் ரேடியேஷன் தேவைப்படும்.
இதற்கிடையில், இந்த புற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
நல்ல வாய்-பல் சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலமும், நாள்பட்ட எரிச்சலை ஏற்படுத்தும் புகையிலை, வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு மற்றும் ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலமும் மட்டுமே தடுப்பு சாத்தியமாகும், என்று டாக்டர் கட்டாரியா கூறினார்.
புகையிலை மற்றும் ஆல்கஹால் காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதித்த நோயாளிகள், அவற்றை நிறுத்திய பின்னரும், மேற்பரப்பு சளி மாற்றங்களால் இரண்டாம் நிலை புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இரண்டாம் நிலை புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான சிறந்த வழி, தூண்டும் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்துவதும், சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் பின்தொடர்தலுடன் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் ஆகும் என்று அவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.