இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இன்று கல்லூரி மாணவர்கள் இருதய நோய் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
Advertisment
அரிமா சங்கம், எஸ்.பி.டி.எ மற்றும் எஸ்.என்.எஸ் கலை கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் ராம் நகர் பகுதியில் இருந்து வ.உ.சி மைதானம் வரை விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய மருத்துவர் சுப்புராஜ் கூறுகையில், "இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இளைய தலைமுறைகள் உடலை பாதிக்கும் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், துரித உணவு முறை போன்றவற்றை விட்டுவிட வேண்டும்.
நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை கடைபிடிக்காமல் போனதன் விளைவு பல்வேறு நோய்களை உண்டாக்கி வருகிறது. இந்த விழிப்புணர்வு பேரணிகளால் நம் உடல், நம் வாழ்க்கை முறை, நோய் பற்றி மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அளவான உணவு, சரியான நடைபயிற்சி, நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும்" என மருத்துவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news