New Update
/indian-express-tamil/media/media_files/WmUa3Df4ki95aXi16qdz.jpg)
சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக அப்பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் இன்று(நவ 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டிற்கான மண்டல மற்று மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கடந்த 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், சபரிமலையில் இன்று (நவ 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 27-ஆம் தேதி மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.