நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ சித்தர்கள் நமக்களித்த வற்றாத இரு அருஞ்செல்வங்களே மருத்துவமும், யோகக்கலையும் ஆகும்.
Advertisment
நோய் வந்தபின்பு மருந்து தேடி ஓடுவதை விட நோய் வராமலேயே உடலை சீர்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானதும், புத்திசாலித்தனமானதும் ஆகும். அந்த வகையில் நோய்கள் நெருங்கமுடியாத வகையில் உடலை செதுக்கும் திறன்படைத்த ''யோகக்கலை'' மருத்துவத்தைவிட ஒருபடி மேலான சிறப்பைப் பெற்று விளங்குகிறது.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உடல நலத்திற்கு அதிக நன்மை அளிக்கும் யோகக்கலை நமக்கு ஆரோக்கியமான வாழ்வை காட்டுகின்றன. உங்களால் நம்ப முடிகிறதா? யோகாசங்கள் உடல் நலத்திற்கு மட்டுமில்லை உங்களை அழகாக்கும் வல்லமையும் படைத்தவதை. அழகான முகம் தோற்றம் மற்றும் உடல் தோற்றத்திற்கு உரியவராக வேண்டும் என்றால் நீங்கள் தினமும் யோகா செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
Yoga Asanas for Beginners on International Yoga Day:நமக்கு யோகா ஏன் அவசியம்?
இன்றைய கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.
ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.