சிக்கனை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டாம் என்றும் அப்படி கழுவினால் நோய் தொற்றுக்கான ஆபத்து அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு கவுன்சில், சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. சிக்கனை சமைப்பதற்கு முன்பு கழுவினால், மாமிசம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் என்றும் இதனால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்கனை குழாய் தண்ணீரில் கழுவும்போது. மாமிசத்தில் இருக்கும் பேக்டீரியாக்கள் மாமிசத்தின் மேல் பகுதிக்கு வந்துவிடுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிக்கன் மாமிசத்தை சமைத்து சாப்பிடும் நபர்களுக்கு கம்போலி பேக்டிரியா, சால்மோனில்லா பேக்டீரியா தொற்றுகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சிக்கன் மாமிசத்தை எலுமிச்சை சாறு அல்லது வினிகர் பயன்படுத்தி கழுவார்கள். ஆனால் இப்படி செய்வதால் பேக்டிரியா கொல்லப்படுவதில்லை என்றும் கூடுதலாக மாமிசம் கெட்டு போகும் வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்நிலையில் கண்டிப்பாக சிக்கனை கழுவ வேண்டும் என்றால், ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து அதில் மாமிசத்தை கழுவுவது நல்லது என்று கூறப்படுகிறது