/indian-express-tamil/media/media_files/2025/09/21/sleep-2025-09-21-16-57-43.jpg)
பெட் ரூமில் நிம்மதி தூக்கம்... இத மட்டும் தவிர்த்தால் போதும்!
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான ஒரு விஷயம். தினமும் எட்டு மணிநேரம் தூங்கினால் தான் நம் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய நவீன காலக்கட்டத்தில் நாம் என்ன செய்கிறோம். தூக்கம் வராமல் இரவு செல்போன்களை உபயோகித்து வருகிறோம்.
நம் மனது அமைதியாக இருக்க தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முறையான தூக்கம் இல்லை என்றால் மன அழுத்தம், சோர்வு, உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு களைப்பாக இருக்கும் படுத்தால் தூங்கிவிடலாம் என்பது போல் இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராமல் தவிப்பார்கள்.
படுக்கை அறையில் நல்ல தூக்கமும், அமைதியும் நிலவ வேண்டும் என்றால் சில வேண்டாத விஷயங்களை தவிர்க்க வேண்டும். படுக்கை அறைக்கான வாஸ்து சாஸ்திரத்தின்படி மாஸ்டர் பெட்ரூம் வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும்.
அதேபோன்று படுக்கும் பொழுது உடலின் தலை தெற்கு திசையை நோக்கியும், கால்கள் வடக்கு திசையை நோக்கியும் இருக்க வேண்டும். அமைதியின் நிறங்களான அறையின் நிறமாக நீலம், வெளிர் நீலம், பழுப்பு, வெள்ளை மற்றும் கிரீம் நிறங்களை பயன்படுத்தலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி படுக்கை அறையில் தெய்வங்களின் படங்களை வைக்காமல் இருப்பது நல்லது. இது தம்பதியரின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும். சிலர் படுக்கை அறையில் வேட்டையாடும் விலங்குகளின் படங்கள் அல்லது சிலைகளை வைத்திருப்பார்கள்.
இது தம்பதிகளின் உறவில் மோதல்களை ஏற்படுத்தும். அமைதியை குலைக்கும். விரிசல்களை உண்டாக்கும். படுக்கையறை என்பது அமைதி, நிம்மதி மற்றும் சந்தோஷத்தை தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.அதனால் இனிமேல் படுக்கையறையில் இதுபோன்ற பொருட்களை வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் படுக்கையறைக்கு செல்லும் நான்கு மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவு உட்கொள்வது நல்லது. அதிலும், சர்க்கரை போன்ற உணவுகள் அல்லாமல் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.