கேன்சர் ஆபத்து; பெண்கள் மாதம் ஒருமுறை இதை பண்ணுங்க; டாக்டர் நித்யா

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோய் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, சிகிச்சை முடிந்த பிறகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோய் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, சிகிச்சை முடிந்த பிறகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

author-image
WebDesk
New Update
Cancer Siddha Medicine Dr Nithya

Cancer Siddha Medicine Dr Nithya

புற்றுநோய் (Cancer) என்பது இன்று பலருக்கும் ஒரு அச்சமூட்டும் நோயாக மாறி வருகிறது. மரபியல் காரணங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகள் போன்றவை புற்றுநோய் உருவாவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது, சித்த மருத்துவம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து சித்த மருத்துவர் டாக்டர் நித்யா இந்த வீடியோவில் விளக்கமாகப் பேசுகிறார். 

Advertisment

கடந்த பத்தாண்டுகளில், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் வயது வித்தியாசமின்றி அதிகரித்திருப்பதுபோல, புற்றுநோயும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, பெண்களைப் பொறுத்தவரை, பால் சுரக்கும் நாளங்களில் (ducts) செல்கள் கட்டுப்பாடின்றிப் பெருகுவதால், இது கட்டியாகவோ அல்லது புற்றுநோய் செல்களாகவோ மாறுகிறது. இதனை டக்டல் கார்சினோமா (Ductal carcinoma) என்று அழைக்கிறார்கள். இது நாளடைவில் இரத்தத்தில் கலந்து, உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. 

புற்றுநோய்க்கான சிகிச்சையில், அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுவது ஒரு வழி. ஆனால், அறுவை சிகிச்சை செய்த பிறகும், மீண்டும் புற்றுநோய் செல்கள் வளராமல் இருக்க, உணவு முறையிலும், வாழ்விலும் கவனம் செலுத்துவது அவசியம்.

Advertisment
Advertisements

haldi

புற்றுநோயை எதிர்க்கும் மூலிகைகள்:

சித்த மருத்துவத்தில் விழுதுகர்பம் மற்றும் கொடிவேலி போன்ற மூலிகைகள் புற்றுநோய் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விழுதுகர்பம்: இது ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, பல நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டது.

கொடிவேலி: உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. இதை கஷாயம், சூரணம், தைலம் போன்ற பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து 100 நாட்கள் உட்கொள்ளும்போது, உடலில் உள்ள புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடி, நல்ல பலன்களைத் தரும்.

மஞ்சள் குடிநீர்: இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இதனை தினசரி இருமுறை, காலை மற்றும் இரவு என 60 மிலி அளவு அருந்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனைகள்:

தவிர்க்க வேண்டிய உணவுகள்: வறுக்கப்பட்ட, பொறிக்கப்பட்ட, புகைக்க வைக்கப்பட்ட உணவுகள் (smoked and grilled items), நிறமூட்டி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Greens

சேர்க்க வேண்டிய உணவுகள்: பொன்னாங்கண்ணி கீரை, தவசி கீரை போன்ற பல்வேறு கீரைகள், முள் சீதா (soursop), மற்றும் சில வகையான வாழைப்பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம். 

சரியான உணவுப் பழக்கவழக்கங்கள், சித்த மருத்துவ மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம், என்கிறார் டாக்டர் நித்யா. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: