காந்தியின் புத்தக அலமாரி: மகாத்மாவைப் பெரிதும் கவர்ந்த 3 நூல்கள்

இந்த மூன்று நூல்களின் பக்கங்களில்தான், காந்தி ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடி, நாட்டிற்குச் சுதந்திரம் வென்றெடுக்கத் தேவையான அறிவுசார் வலிமையைப் பெற்றார்.

இந்த மூன்று நூல்களின் பக்கங்களில்தான், காந்தி ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடி, நாட்டிற்குச் சுதந்திரம் வென்றெடுக்கத் தேவையான அறிவுசார் வலிமையைப் பெற்றார்.

author-image
WebDesk
New Update
Mahatma Gandhi reading 2

மகாத்மா காந்தி செய்தித்தாள் படிக்கிறார் அக்டோபர் 2-ம் தேதி பிறந்த மகாத்மா காந்தி, தேசப்பிதாவாக நினைவுகூரப்படுகிறார். Photograph: (Express Archive)

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டது போலவே, வாசிப்பின் மூலமாகவும் மகாத்மா காந்தி தனது எண்ணங்களை செதுக்கினார். தென்னாப்பிரிக்காவில் இருந்த இளம் வழக்கறிஞராக இருந்து, இந்திய சுதந்திரத்தின் சிற்பியாக அவர் மாறியதற்கு, புத்தகங்கள் ஒரு பெரிய பங்களிப்பை வழங்கின. சத்யாகிரகம் (உண்மை - சக்தி), அஹிம்சை (வன்முறையற்ற போராட்டம்), ஸ்வராஜ் (சுயாட்சி) உள்ளிட்ட அவரது தத்துவங்களை வடிவமைப்பதில் புத்தகங்கள் பெரும் உதவியாக இருந்தன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அவரைப் பாதித்த பலரில், குறிப்பாக ஜான் ரஸ்கின் (John Ruskin), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy), மற்றும் ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau) ஆகிய மூன்று எழுத்தாளர்கள் காந்தியின் கொள்கைகளை மேலும் கூர்மைப்படுத்தினர். அவர்களின் எழுத்துக்கள் ஒரு புரட்சிக்கான அறிவுசார் கட்டமைப்பை அவருக்கு வழங்கின.

John Ruskin 1

1. ஜான் ரஸ்கின் – 'கடைசி மனிதனுக்கும்' (Unto This Last)

ஜான் ரஸ்கினின் 'கடைசி மனிதனுக்கும்' என்ற புத்தகத்தை காந்தி 1904-ம் ஆண்டு முதன்முதலில் படித்தபோது, அன்று இரவு அவரால் தூங்க முடியவில்லை என்று நினைவு கூர்ந்தார். தொழில்மயமான முதலாளித்துவத்தின் கடுமையை விமர்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பான இந்தப் புத்தகம், பொருளாதாரம் செல்வத்திற்குப் பதிலாக மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று அவரை நம்ப வைத்தது. உழைப்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், அழகு சமூகத்திற்குப் பயன்பட வேண்டும், மேலும் உண்மையான செல்வம் என்பது லாபத்தில் அல்ல, வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று ரஸ்கின் வாதிட்டார். இதனால் ஈர்க்கப்பட்ட காந்தி, தென்னாப்பிரிக்காவில் கூட்டுறவு வாழ்க்கைக்கான ஒரு சோதனையாக ஃபீனிக்ஸ் குடியேற்றத்தை (Phoenix Settlement) நிறுவினார். இந்தப் புத்தகத்தை அவர் குஜராத்தியிலும் மொழிபெயர்த்தார்.

Leo Tolstoy 3

2. லியோ டால்ஸ்டாய் – 'கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள் இருக்கிறது' (The Kingdom of God Is Within You)

Advertisment
Advertisements

லியோ டால்ஸ்டாயின் தீவிரமான கிறிஸ்தவ மனிதநேயக் கருத்துக்கள் காந்தியின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. 'கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள் இருக்கிறது' என்ற நூலில், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அரசு அதிகாரம், ராணுவவாதம் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மதம் ஆகியவற்றை நிராகரித்தார். அதற்குப் பதிலாக, எளிமை, வன்முறையற்ற நிலைப்பாடு, ஆன்மீக உண்மை நிறைந்த வாழ்க்கைக்கு அவர் வாதிட்டார். டால்ஸ்டாயின் எழுத்துக்களை மட்டுமல்லாமல், தனது சொத்து மற்றும் அந்தஸ்தைத் துறந்து மனசாட்சிக்கு இணங்க வாழ்ந்த அவரது தனிப்பட்ட நடைமுறையையும் காந்தி பாராட்டினார். காந்தி தனது அகிம்சை எதிர்ப்புக் கொள்கையை வடிவமைத்துக் கொண்டிருந்தபோது, 1909-ல் இருவருக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. விசுவாசத்தால் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ஒரு வழிகாட்டியாக டால்ஸ்டாயை காந்தி கண்டார். இந்த ரஷ்ய எழுத்தாளரின் நினைவாக, காந்தி 1910-ல் டால்ஸ்டாய் பண்ணை (Tolstoy Farm) நிறுவினார்.

Thorea 2

3. ஹென்றி டேவிட் தோரோ – 'குடிமை ஒத்துழையாமை' மற்றும் 'வால்டன்' (Civil Disobedience and Walden)

அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் இருந்து தோரோவின் குரல் காந்தியை அடைந்தது. 'வால்டன்' என்ற அவரது புத்தகம் சுய-சார்பு மற்றும் எளிமையைப் பற்றிப் பேசியது, இது நகர்ப்புற ஆடம்பரங்களை விட்டு விலகிச் செல்லும் காந்தியின் மனமாற்றத்துடன் ஆழமாகப் பொருந்திப் போனது. ஆனால், தோரோவின் 'குடிமை ஒத்துழையாமை' (Civil Disobedience) என்ற கட்டுரையே காந்தியிடம் மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மனசாட்சியை மீறும் சட்டங்களை அமைதியான முறையில் எதிர்க்க வேண்டும் என்று தோரோ வாதிட்டார். தென்னாப்பிரிக்காவில் அநீதிக்கு எதிரான தனது போராட்டத்திற்கு இது ஒரு "அறிவியல் ரீதியான உறுதிப்படுத்தல்" என்று காந்தி ஒப்புக்கொண்டாலும், தனது சத்யாகிரகக் கருத்து அதற்கு முன்னரே வேரூன்றி விட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அறநெறிக் தைரியம் மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பை தோரோ வலியுறுத்தியது, காந்திக்கு அறிவார்ந்த வலுவூட்டலை வழங்கியது. இதுவே பின்னர் இந்தியாவில் காலனித்துவ அதிகாரத்தை எதிர்த்துப் புரட்சியை ஏற்படுத்திய உத்திகளை வடிவமைத்தது.

Mahatma Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: