எழுந்து வரக்கூடாதா எங்கள் அம்மா? ‘ஐஇ தமிழ்’-க்கு சித்ரகுப்தன் சிறப்பு கவிதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறாது. நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் சித்ரகுப்தன் எழுதிய கவிதை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறாது. நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் சித்ரகுப்தன் எழுதிய கவிதை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayalalitha biopic, thalaivi,

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று (5.12.17) அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் சித்ரகுப்தன் எழுதிய கவிதை வாசகர்களுக்காக...

Advertisment

* எழுகதிர்

போலவே

எங்கள்

Advertisment
Advertisements

அம்மா

எழுந்து

வரக்கூடாதா...

* ஏழரைக்கோடி

மக்களுக்காக

எமனும்

திருந்தக் கூடாதா...

* புத்தொளியாய்

புரட்சித்தாய்

புறப்பட்டு

வரக்கூடாதா...

* புனித ஜார்ஜ்

கோட்டை

மீண்டும்

புதுகோலம்

பூணாதா...

* இறையில்லா

கோயிலாக

பிறையில்லா

வானமாக

திசையில்லா

படகாக

திகைக்குதம்மா

தமிழகம்...

* விடையில்லா

வினாவாக

விழியில்லா

முகமாக

வழியில்லா

வனமாகி

வாடுதம்மா

தமிழகம்...

* துடுப்பில்லா

படகாக

துடிப்பு

இல்லா

உடலாக

காட்சித்தருதே

தமிழகம்...

* மலர் இல்லா

மாலையாக

குயில் இல்லா

சோலையாக

தலையில்லா

தேகமாகி

தடுமாறுதே

தமிழகம்...

கதவு இல்லா

வீடாக

கடவுள் இல்லா

தேராக

திலகமில்லா

நெற்றியாக

திசைதெரியா

கப்பலாக

அலையில் ஆடும்

காகிதமாக

அலைபாயுதே

தமிழகம்...

* குழல் இல்லா

கண்ணனாக

சேவற் கொடியில்லா

கந்தனாக...

கிளியில்லா

மீனாளாக

புலியில்லா

ஐய்யனாக

பொலிவிழந்து

போனதே

எங்கள்

புரட்சித்தலைவி

இல்லா

தமிழகம்...

* தேம்பி அழும்

குரல் கேட்டு

தெய்வத்தின்

தீர்ப்பிலோர்

திருத்தம்

நிகழக்கூடாதா...

பறித்துப் போன

பத்துக்கோடி

தமிழர் உயிரை

பத்திரமாய்

எங்களிடமே

பகவானே நீ

திருப்பித்

தரக்கூடாதா...

- சித்ரகுப்தன்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: