புதுப் பொங்கல் சபதம்!

பொங்கல், தமிழர்களின் தனிப் பெரும் பண்டிகை! உழவர்களின் திருவிழா... உழைப்பின் திருவிழா இது! பொங்கல் விழா மேன்மையை சொல்லும் கவிதை இது!

பொங்கல், தமிழர்களின் தனிப் பெரும் பண்டிகை! உழவர்களின் திருவிழா... உழைப்பின் திருவிழா இது! பொங்கல் விழா மேன்மையை சொல்லும் கவிதை இது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2018, Pongal poem, Kamala.selvaraj

Pongal 2018, Pongal poem, Kamala.selvaraj

கவிஞர் கமல.செல்வராஜ்

Advertisment

O

இப் புண்ணியப் பூமியில்

நித்தம் புலர்ந்தெழும்

Advertisment
Advertisements

செங்கதிரோனுக்கு

புத்தம் புது மண்பானையில்

வெண்பொங்கல்!

நெற்கதிரும் நற்கரும்பும்

மஞ்சளுடன் நவதானியமும்

ஐம்பூதங்களின் பரிசளிப்பு!

O

வீட்டிற்கு வெள்ளை

முற்றத்தில் மாக்கோலம்

வீதியில் தோரணம்

மாட்டுக்கு மரியாதை

புத்தாடையுடன் புன்சிரிப்பும்

பொங்கும் பொங்கலுக்கு

அடையாளம்!

O

மண்ணைப் பொன்னாக்கும்

உழவனுக்கு மரியாதை

வீறுகொண்டுத்

துள்ளிக் குதித்தோடும்

காளையை அடக்கிடும்

வீரருக்கும் மரியாதை

புல்லுக்கும் பூண்டிற்கும்

மரியாதை

இது

தை பிறந்ததால்

வந்த மரியாதை!

O

குடிசையும் மாடியும்

மகிழ்ந்து கொண்டாடும்

சமத்துவப் பொங்கல்

இதுவே

தமிழினத்தின்

தனித்துவப் பொங்கல்!

O

இனி

போகியோடு “ஒக்கிக்கும்”

விடை கொடுப்போம்

ஒருபோதும் இயற்கைக்கு

இடையூறு செய்யோமென

புதுப் பொங்கல் சபதமேற்போம்…!

(கவிஞர் கமல.செல்வராஜ், கல்வியியல் கல்லூரியின் முதல்வர். ஆய்வுப் பட்டம் பெற்ற முனைவர்! கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841. அணுக: drkamalaru@gmail.com)

 

Pongal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: