புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரசு சார்பில் திங்கள்கிழமை (21.04.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாரதிதாசன் வாழ்ந்த நினைவு இல்லத்தில் தமிழறிஞர்கள் பாடல்கள்பாடி புகழஞ்சலி செலுத்தினார்கள்.
நாட்டின் விடுதலைக்கும், தமிழ் மொழியின் மீது உள்ள தீவிர பற்றின் காரணமாக பாரதிதாசன் எழுதிய பாடல்களால் “புரட்சிக்கவிஞன்” என போற்றப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/22/9EmqrlrC2QDqSdcoAzN9.jpg)
புதுச்சேரியில் பிறந்து புதுச்சேரிக்கு வந்த மகாகவி பாரதியாரின் கவிதைகளில் ஈர்த்து கனகசுப்ரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர், தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 61வது நினைவு நாளையொட்டி ஆளுநர் மாளிகை அருகேவுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் அருங்காட்சியமாக அமைக்கப்பட்ட அவர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலை மற்றும் புகைப்படத்திற்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், பாரதிதாசனின் குடும்பத்தினர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் தமிழறிஞர்கள் மலர்களை தூவியும் அவரது படைப்புகளை பாடியும் புகழஞ்சலி செலுத்தினர்.