/indian-express-tamil/media/media_files/2025/09/06/ya-manigandan-elumalai-2025-09-06-07-08-02.jpg)
சென்னை பல்கலைக் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி துறை தலைவர் பேராசிரியர் மணிகண்டன் மற்றும் வானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஏழுமலை
சென்னை பல்கலைக் பல்கலைக்கழக தமிழ் மொழி துறை தலைவர் பேராசிரியர் மணிகண்டன் மற்றும் வானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஏழுமலைக்கும் மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வலைய தளத்தில் தளத்தில் கூறியுள்ளதாவது:
மணற்கேணி ஆய்விதழ் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிகரி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவரையும் கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறோம்.
2025 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகள் பெறும் ஆளுமைகளை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
பேராசிரியர் த.மணிகண்டன், தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகத்தில்.
ஆசிரியர் மு.ஏழுமலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொடூர், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரத்தில் செப்டம்பர் இறுதியில் நடைபெறவுள்ள நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும்.
நிகரி விருது பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பும் பட்டயமும் கொண்டது.
மணற்கேணி ஆய்விதழ் வழங்கும்
— Dr D.Ravikumar MP (@WriterRavikumar) September 5, 2025
நிகரி விருதுகள்
அறிவிப்பு
மணற்கேணி ஆய்விதழ் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிகரி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவரையும் கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது… pic.twitter.com/OUs57sETTF
2024 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகள் பெற விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.செந்தில் வேலன் அவர்களுக்கும்; சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.அழகரசன் அவர்களுக்கும் வழங்கப்பட்டன. நீதிபதி கே.சந்துரு அவர்கள் விருதுகளை வழங்கினார்.
2023 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகள் பள்ளி ஆசிரியர் எல்.வித்யா அவர்களுக்கும் பேராசிரியர் பா.ரவிக்குமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டன. அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விருதுகளை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் - கே.வி.ஜெயஸ்ரீ விழுப்புரம் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் - ரமேஷ் வழங்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் - அருணகிரி அவர்களுக்கும், சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் - செங்கொடி வழங்கப்பட்டன.
2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் - பாரி, கல்லூரி பேராசிரியர் - தமிழரசி சற்குணம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள் தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்அ.அன்சார் அலி அவர்களுக்கும்; தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, முதல்வர் முனைவர் வெ.செந்தமிழ்ச் செல்வி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
2018 ஆம் ஆண்டு விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இரா.மோகனசுந்தரம்; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் வரலாறு மற்றும்கடல்சார்தொல்லியல் துறையின் பேராசிரியர் சு.இராசவேலு ஆகியோர் நிகரி விருதுகளைப் பெற்றனர். மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் விருதுகளை வழங்கினார்.
2017 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் திரு அறவேந்தன், நெல்லை மாவட்டம் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் இளங்கோ கண்ணன் ஆகியோர் நிகரி விருதைப் பெற்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை பாஸ்கரன் அவர்கள் விருதுகளை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ந.சாந்தி ; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணிபுரியும் சா.உதயசூரியன் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை இராமச்சந்திரன் அவர்கள் விருதுகளை வழங்கினார்.
2015 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் நிகரி விருதுகளைப் பெற தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை க.பாஸ்கரன் விருதுகளை வழங்கினார்.
2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும்; கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப் பள்ளியின் முதல்வர் 'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். கல்வி உரிமைப் போராளி பேராசிரியர் பா.கல்யாணி விருதுகளை வழங்கினார்.
2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி, கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர் த.பாலு நிகரி விருதுகளைப் பெற்றனர். கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான
மாண்பமை வே.வசந்திதேவி விருதுகளை வழங்கினார். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.