Advertisment

10 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது - தமிழக அரசு அறிவிப்பு

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் 10 தமிழ் அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu govt announced classical tamil award, kalaignar m karunanidhi classical tamil award, kalaignar m karunanidhi classical tamil award for tamil scholars, tamil nadu govt, 10 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழக அரசு அறிவிப்பு, classical tamil award, tamil nadu govt, tamil news, tamil nadu news

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழி தமிழாய்வு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும்.

அறக்கட்டளை துவக்கப்பட்ட பின் 2009ம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு 2010 ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதலமைச்சர் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 8வது ஆட்சிக்குழு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் 30.8.2021 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பெற்ற விருது தேர்வுக் குழுவினரால் கீழ்காணும் 10 விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  1. 2010 - முனைவர் வீ.எஸ்.இராஜம் (Former Senior Lecturer, Department South Asia Regional Studies, University of Pennsylvania)
  2. 2011 - பேராசிரியர் பொன். கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
  3. 2012 - பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
  4. 2013 - பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
  5. 2014 - பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
  6. 2015 - பேராசிரியர் மறைமலை இலக்குவனார், (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி)
  7. 2016 - பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)
  8. 2017 - பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany.
  9. 2018 - கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை)
  10. 2019 - பேராசிரியர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தை புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)

2010 முதல் 2019 வரை யிலான கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது 30 8 2020 1 அன்று நடைபெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எட்டாவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது மேலும் 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டு களுக்கு உரிய கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான முன்மொழிவுகளை பெறுவதற்கு விளம்பரம் வெளியிடவும் ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ் மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்பட உள்ளது மேலும் 2020 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பணிகள் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment