தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு ஏகாதிபத்தியத்தின் பெருமைகளை வேரறுக்கும் தனிநபர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
காலனித்துவ விளைவுகளின் சமரசமற்ற இரக்கமுள்ள ஊடுருவல் மற்றும் கலாச்சாரங்கள், கண்டங்களுக்கு இடையேயான வளைகுடாவில் உள்ள அகதிகளின் நிலை ஆகியவற்றை தனடு தனது படைப்புகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்வீடிஷ் அகாடமி கூறியுள்ளது.
1948 இல் சான்சிபாரில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வரும் அப்துல்ரசாக் குர்னா கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் 1994 இல் புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்ட பாரடைஸ் உட்பட 10 நாவல்களை எழுதியுள்ளார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு குழுவின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன் அவரை “உலகின் மிக முக்கியமான காலனித்துவத்திற்கு பிந்தைய எழுத்தாளர்களில் ஒருவர்” என்று அழைத்தார். மதிப்புமிக்க விருது தங்கப் பதக்கம் மற்றும் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் ($ 1.14 மில்லியனுக்கும் அதிகமான) உடன் இந்த நோபல் பரிசு வருகிறது. நோபல் பரிசு பரிசும் பணமும் ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர் ஆல்ஃபிரட் நோபல் இறந்த பிறகு அவருடைய பெயரால் 1895ல் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்பட்டது. தேர்வுக் குழு நடுவர்கள் அவரது கவிதைகளை தனிமனித இருப்பை உலகளாவியதாக ஆக்கும் பிழை இல்லாத கவித்துவமான குரல் என்று கூறினார்கள்.
பல ஆண்டு சர்ச்சைகளுக்குப் பிறகு லூயிஸ் க்ளூக் ஒரு பிரபலமான தேர்வாக இருந்தார். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் ஸ்வீடிஷ் அகாடமியை உலுக்கியதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டில் நோபல் பரிசு அறிவிப்பை வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் இரகசிய அமைப்பு ஒத்திவைத்தது. ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹாண்ட்கேவுக்கு 2019 ஆம் ஆண்டின் பரிசு வழங்கப்பட்டது. 1990களில் பால்கன் போர்களின் போது செர்பியர்களுக்கு அவர் வலுவான ஆதரவை அளித்ததால் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
72 வயதான எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா 10 நாவல்களையும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது அனைத்து படைப்புகளும் ஒரு பொதுவான தன்மையால் ஆனவை. அகதிகளின் அனுபவம், அவரது சுயத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும், அவரது எழுத்து இது ஏக்கத்தில் மூழ்காமல், கடந்த காலத்தைப் பற்றிய அவரது தெளிவான கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது.
அவரது முதல் நாவல் மெமரி ஆஃப் டிப்பார்ச்சர் (1987), ஆனால் அவரது திருப்புமுனையான படைப்பு பாரடைஸ் (1994) ஆகும். 1990ல் கிழக்கு ஆப்பிரிக்காவில் அவரது பயணத்தில் பிறந்த இந்த நாவல், குறிப்பாக கதாநாயகனின் சித்தரிப்பில் ஜோசப் கான்ராட்டின் இருட்டின் இதயம் (1899) என்ற படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“