/indian-express-tamil/media/media_files/2025/10/28/sylvia-plath-2025-10-28-10-41-03.jpg)
நெட்டுசன்களின் அக உலகம், ஒரு காலத்தில் நோட்டுப் புத்தகங்களுக்குள் அடங்கியிருந்த நிலையில், இப்போது திரைகள், ஹேஷ்டேக்குகள் மற்றும் டிஜிட்டல் நாட்குறிப்புகள் முழுவதும் எதிரொலிக்கிறது.
93 ஆண்டுகளுக்கு முன் பிறந்த சில்வியா பிளாத், இன்றும் ஒரு முக்கியமான கவிஞராக இருக்கிறார். ஆனால், ஒருவரின் சொந்த விஷயங்களை வெளிப்படுத்துவது இப்போது வெறும் 'கண்டென்ட்' (Content - ஒரு தகவல்) ஆக மாறிவிட்ட நிலையில், அவருடைய மனத்திறப்புக்கு இப்போது என்ன மதிப்பு?
சில்வியா பிளாத்தின் கவிதைகளும் டைரிகளும் ஒருவரின் தனிப்பட்ட உலகத்தை வெளியில் காட்டின. பல தலைமுறைகள் அதை ஆழ்ந்த கவனத்துடன் படித்தனர். ஆனால் முன்பு டைரி அல்லது மருத்துவர் அறைக்குள் இருந்த 'ரகசியம் சொல்லும் பழக்கம்', இப்போது இணையத்தில் நிரம்பி வழிகிறது. டிவிட்டர் (X), இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில், ஒரு ரகசியத்தைச் சொல்வதே ஒரு 'சமூக வலைத்தள செயல்' ஆகிவிட்டது.
ஃபெஷோல் (Fesshole) போன்ற அநாமதேய தளங்களில், மக்கள் அன்றாடப் பாவங்களையும் ரகசியங்களையும் சொல்கிறார்கள். இது ஒரு சாமியார் இல்லாமல், பாவமன்னிப்பு கேட்கும் இடம் போல உணர்த்துகிறது. இங்கு ரகசியங்களைப் பகிர்வது பாவமன்னிப்பைப் பெறுவதற்காக அல்ல, மாறாக தனிமையில் இருந்து விடுபட்டு, ஓர் ஆன்லைன் கூட்டத்துடன் இணைவதற்காக இருக்கிறது.
இந்த எல்லையில்லாப் பகிர்தலைக் கண்டு சில்வியா பிளாத் ஆச்சரியப்பட்டும், பயந்தும் இருப்பார் என்று எளிதாக நினைக்கலாம்.
சில்வியா பிளாத்தின் வெளிப்பாடும் இன்றைய பகிர்தலும்
சில்வியா பிளாத் தனது மன வலிகளைச் சொல்லும்போது, அது வெறும் புலம்பலாக இல்லாமல், ஒரு கலைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்தப்பட்டது. அவரது கவிதைகள் படிப்பவரின் மனதிற்குள் சென்று, அவரைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தன. அது வெறும் 'லைக்' அல்லது 'வியூஸ்' பெறுவதற்காகச் செய்யப்படவில்லை. அது மொழியின் மூலம் உருவாக்கப்பட்ட ஆழமான ஒரு தொடர்பு.
ஆனால், இப்போது சமூக ஊடகங்களில் எல்லாவற்றையும் பகிர்வது அதிகரித்துவிட்டதால், ரகசியங்களை வெளியிடுவதே சாதாரணமானதாகிவிட்டது. உணர்வுகளைப் பகிர்வது கட்டாயமாகிவிட்ட இந்தச் சூழலில், கலைஞர்கள் கூட மக்களின் கவனத்தைத் தக்கவைக்கப் போராடுகிறார்கள்.
ஆனால் சில்வியா பிளாத்தின் மனத்திறப்பு, கிட்டத்தட்ட 90 வருடங்கள் ஆகியும், இன்னும் வலிமையுடன் இருக்கிறது. ஏனென்றால், அதை நம்மால் சாதாரணமாகப் படித்துவிட்டுப் போக முடியாது. அவருடைய கலையை அனுபவித்த பிறகு, எழுதியவரும், படித்தவரும் ஏதோ ஒரு மாற்றம் அடைவார்கள்.
இன்றைய ஆன்லைன் உலகம்:
சில்வியா பிளாத்தின் 'தி பெல் ஜார்' நாவலில் வரும் 'அத்திமரம்' (Fig Tree) பற்றிய பிரபலமான கருத்து, இப்போது நிறைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. டிஜிட்டல் உலகில் பிளாத் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்: டிக்டாக் இளைஞர்கள் அவரது வரிகளைப் பயன்படுத்துகிறார்கள், இன்ஸ்டாகிராமில் அவரது நாவல் பற்றிய அழகியல் படங்கள் பகிரப்படுகின்றன.
“ஒருவர் தன் உண்மையை மற்றவர் முன்னிலையில் வெளிப்படுத்துவது ஒரு ஆபத்து” என்று கவலைப்பட்ட பிளாத், இப்போது எல்லாராலும் திரைகள் வழியாகப் பார்க்கப்படுகிறார்.
இன்று சில்வியா பிளாத்தைப் படிப்பது என்பது, கடந்த காலத்தின் மனச்சோர்வைப் பற்றிப் படிப்பது அல்ல. மாறாக, நம்முடைய இந்த 'அளவுக்கு மீறிய பகிர்தல்' யுகத்தைப் பற்றிய ஓர் எச்சரிக்கையைப் பார்ப்பதுதான். ஒரு கவிதையாக இருந்தாலும் சரி, ஒரு சமூக ஊடகப் பதிவாக இருந்தாலும் சரி, ரகசியம் சொல்லும் செயல் எப்போதும் இரண்டு விளிம்புகள் கொண்டது என்பதை அவர் நமக்கு நினைவுபடுத்துகிறார்: அது மற்றவர்களுடன் இணைவதற்கான ஒரு முயற்சி, அதே சமயம் அழிந்து போகும் ஆபத்தும் அதில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us