இந்தியாவில் உள்ள எழுத்தாளர்கள் ஆய்வு செய்து கட்டுரைகளை ஆய்வு செய்வதற்கு வசதியாக புதுச்சேரியில் பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில் தமிழியல் ஆய்வு நடுவம் புதுச்சேரியில் தொடகப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் எழுத்தாளர் பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில் "எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழியல் ஆய்வு நடுவம்" தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காமராஜர் நகர், திருவேங்கடம் வீதி, எண்: 12 இல் தொடங்கப்படவுள்ள இந்த ஆய்வு நடுவத்தில் பல்வேறு எழுத்தாளுமைகள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவும், எழுத்தாளர்கள் இங்குள்ள புத்தகங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஆய்வு நூல்களை வெளியிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஓர் எழுத்தாளர் இங்கு தங்கித் தங்களுடைய படைப்புகளை உருவாக்கிக் கொள்ள போதிய இடவசதியும், இணைய வசதியும், இங்குள்ள புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.
இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பி.என்.எஸ்.பாண்டியன் தலைவர் கேட்டுக்கொண்டார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாளை (27.04 .2025) ஞாயிறு மாலை 04.00 மணி அளவில் ஆய்வு நடுவத்தின் திறப்பு விழா சிறப்பாக நடந்தது .
பிரபஞ்சன் அறக்கட்டளைக்காக.... நிர்வகிக்கும் பி.என்.எஸ்.பாண்டியன் தலைவர், பிரபஞ்சன் அறக்கட்டளை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: புதுவை இளவேனில், மு .வேடியப்பன், பேரா. பா. இரவிக்குமார், புதுவை சீனு. தமிழ்மணி ஆகியோர் தெரிவித்தனர். தொலைபேசியில் எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் 98946 60669 இந்த எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.