Advertisment

வாக்காளர்களின் முடிவு சொல்வது என்ன?

கடந்த வாரம் நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு பல செய்திகளை சொல்கின்றன. ஒரு கையில் ஐந்து விரல்களும் வெவ்வேறாக இருப்பது போல இந்த தேர்தல் முடிவுகளும் வெவ்வேறானவை. இவற்றில் நான் மூன்று மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து கவனித்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

author-image
WebDesk
New Update
5 states assembly election results, P Chidambaram writes, Single-minded voters, UP, Uttar Pradesh

ப சிதம்பரம்  

Advertisment

P Chidambaram writes Single-minded voters : இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்குள்ள 403 சட்டப்பேரவைகளுக்கு தான் தேர்தல் நடந்தது.  அடுத்ததாக 117 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாபிலும் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தை சற்று கொந்தளிப்பான எல்லை  மாநிலம் என்றும் சொல்வார்கள். மூன்றாவதாக 40 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே கொண்ட மிகச் சிறிய மாநிலமான கோவாவிலும்  தேர்தல் நடந்தது.  

ஒரு காலத்தில், மக்களை ஆளும் உரிமை தெய்வீக உரிமையாக இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த கருத்து நிராகரிக்கப்பட்டது. மற்ற அரசாங்க அமைப்புகள் முடியாட்சியை மாற்றியுள்ளன. ஜனநாயகம் அத்தகைய அமைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு மனித கண்டுபிடிப்பு ஆகும், இது ஒரு மாநிலத்தின் குடிமக்கள் தங்கள் ஆட்சியாளர்களை வாக்கு மூலம் மாற்ற அனுமதிக்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை  ஜனநாயகம் என்பது மற்ற அனைத்தையும் தவிர மிக மோசமான அரசாங்க வடிவமாகும்  என்று கூறினார். இந்தியா தனது எல்லா தவறுகளையும் மீறி ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்தது. பல்வேறு ஜனநாயக அமைப்புகளுக்கு மத்தியில், சில நேரங்களில் வினோதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்த பின்னும் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றியாளர் என்ற  தேர்தல் முறையை நாம் தேர்வு செய்திருக்கிறோம்.

பஞ்சாப், உ.பி மற்றும் கோவா

கடந்த வாரம் நடந்து முடிந்த  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு பல செய்திகளை சொல்கின்றன.  ஒரு கையில் ஐந்து விரல்களும் வெவ்வேறாக  இருப்பது போல  இந்த தேர்தல் முடிவுகளும்  வெவ்வேறானவை. இவற்றில் நான் மூன்று மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து கவனித்து வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்குள்ள 403 சட்டப்பேரவைகளுக்கு தான் தேர்தல் நடந்தது.  அடுத்ததாக 117 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாபிலும் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தை சற்று கொந்தளிப்பான எல்லை  மாநிலம் என்றும் சொல்வார்கள். மூன்றாவதாக 40 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே கொண்ட மிகச் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல் நடந்தது.  மொத்தத்தில், பிஜேபி தொடர்ச்சியின் கதாநாயகனாகவும், காங்கிரஸ் (மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி) மாற்றத்தின் கதாநாயகனாகவும் இருந்தது. இதன் விளைவாக  பஞ்சாப்பில் மட்டும் வெற்றி கிடைத்தது.  மற்ற மாநிலங்களில்  போட்டியின்றி வெற்றி பெற்றது பா.ஜ.க.

கோவாவில், ஆட்சி மாற்றத்திற்கான ஆசை இருந்தது.  வாக்குகள் எண்ணப் படுவதற்கு  இரண்டு நாட்களுக்கு முன், நான் விமானத்தில் என் இருக்கையில் அமர்ந்தபோது, ஒரு பெண்மணி என் அருகில் அமர்ந்து, "வெற்றி, வெற்றி" என்று எனக்கு மட்டும்  கேட்கும்படி கூறினார். கோவாவில் ஒரு வலுவான அடித்தளம் இருந்தது, அது மாற்றத்தை உச்சரித்தது. வாக்குகள் எண்ணப்பட்ட போது, 66 சதவீத வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது, ஆனால் முடிவு தொடர்ச்சியானது.

மாற்றம் உண்டு  ஆனால்  மாறுதல்  இல்லை

கோவாவின் 40 தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் விடுமுறைக்கு  வந்தவர்கள்   மிராமர் கடற்கரையில்  நடமாடிக் கொண்டிருந்தனர்.  மேரி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தின் படிகளில்  செல்பியும்  எடுத்துக்கொண்டனர். மாற்றத்தை பற்றி யாரும் சிந்தித்ததாக  தெரியவில்லை. பெரும்பான்மையானவர்கள் விருப்பத்துக்கு  எதிரான  முடிவு தான் வெற்றியடையும் என்றால்  இந்த தேர்தல் எதற்காக என்றும் சிந்திக்க வேண்டியது வந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் தோற்றவர்கள் தான். தோற்றவர்களில் எட்டுப்பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு வெல்லும் வாய்ப்பு இருந்த நிலையில் 169 ல்  இருந்து 1647 வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் தோற்றார்கள். அவர்கள்  எட்டு பேரில், ஆறு பேர் பாஜக வேட்பாளர்களிடம் தோற்றுப் போனார்கள்.  

மூன்று மாநில தேர்தல்களில்  வெல்ல காங்கிரஸ் தனது அனைத்து சக்திகளையும் பயன் படுத்தியது.  பஞ்சாபி தேர்தலில்  முதல்வரையே மாற்றி வெல்ல முயன்றது.  தலித் ஒருவரை தைரியமாக நாற்காலியில் அமர்த்துவதன் மூலம் வேரூன்றிய அதிகார கட்டமைப்பிற்கு சவால் விடுத்தது . இந்த மாற்றங்கள் மூலம் ஆட்சியை தொடரவும் முயன்றது.  ஆனால் இந்த மாற்றம் போதாது. இன்னும் மாற்றங்கள் வேண்டும் என ஆம் ஆத்மி  பிரச்சாரம் செய்தது. முடிவில் வென்றது. பாஜக உட்பட அனைத்து கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைத்து போட்டியிட்ட 117 தொகுதிகளில் 92 ல் வெற்றி வாகை சூடியது.  

உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் 400 தொகுதிகளில்  போட்டியிட்டது. கடந்த ஆண்டுகளில் முதல் முறையாக  இந்த முறை தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிட்டது. பெண்களை போராளிகளாக முன்னிறுத்தி போராட்டத்தில் குதித்தது. அந்த முழக்கம் பெண்களை ஈர்த்தது. பதிவான வாக்குகளில் 2.68 சதவீத வாக்குகளை பெற்று இரண்டு தொகுதிகளில் வென்றது.



கோவா கட்சி மாறிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இளைஞர்கள், படித்தவர்கள், கறைபடாதவர்கள் என்று  வேட்பாளர்களை தேர்வு செய்தது. அனைத்து பிரச்சினைகளையும் எடுத்துரைத்து, சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்தது. சமூக ஊடக  வாயிலாகவும்  பிரச்சாரத்தில்  இறங்கியது.  ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை  உத்வேகத்துடன் களத்தில் இறங்கிய  துடிப்பான வேட்பாளர்களில் இருவரைத் தவிர அனைவரும் தோற்று விட்டனர்.  ஊழல் குற்றச்சாட்டுகளுடன், கட்சி மாறிய 8 பேர்  இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கோவா தேர்தலில் காலத்துக்கு புதியவர்களான ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள்  தலா   6.77 மற்றும் 5.21 வாக்குகள் பெற்று  காங்கிரசுக்கு  இரண்டு வெற்றிகளை பெற்று தந்தன.  இப்படியாக இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பறித்தன.

திசை மாறிய பயணம்

தேர்தல் முடிவுகளைப் படிக்கும் போது, எந்த மாற்றமும்  வேண்டாம் என நினைத்தவர்கள்  செயலில் இறங்கி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  அவர்களது வேலை ஒரு பொத்தானை அமுக்கி வாக்களிப்பது தான். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவாவில் ஒற்றை எண்ணத்துடன்  அவர்கள் அதைச் செய்தார்கள். ப்ரோ-சேஞ்சர்கள்  எனப் படும்  மாற்றத்தை விரும்பியவர்கள்  கண்டா கண்டா பட்டனையும் அமுக்கி   மாற்றம் ஏற்படுவதை  மாற்றி விட்டார்கள். மக்கள் போதைப்பொருள் கடத்தல், தெய்வ நிந்தனை மற்றும் வேலைகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு (பஞ்சாப் போல) எதிராக இருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது; மக்கள் ஏழைகளாக இருப்பதில் திருப்தி அடைகிறார்கள், தங்கள் குழந்தைகள் வேலை தேடி மாநிலத்திற்கு வெளியே செல்வதை கண்டு (மக்கள் தொகையில் பதினாறில் ஒருவர் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள்), மற்றும் பரிதாபகரமான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை அனுபவிக்கிறார்கள் (உ.பி. போல); கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளில் உண்மையான அக்கறை கொண்டவர்கள்

ஐந்து மாநிலங்களில்,  இந்துத்துவா வாக்குகள் வளர்ந்து வரும் நிலையில், பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர் என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மையானவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருக்கலாம் ஆனால் அவர்கள் பஞ்சாப் தவிர, ஒரு மனதாக அல்லது ஒரு கட்சிக்காக வாக்களிக்கவில்லை. கோவாவில், நிச்சயமாக, மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளை மூன்று நான்கு கட்சிகளுக்கு பிரித்து, சதியை இழந்தனர். இந்தக் கட்டுரை ஜனநாயகத்தைப் பற்றிய புலம்பலாகப்  இருக்காது. இதன் உட்பொருள் புரிந்து கொள்ளப்படும் என  நம்புகிறேன்.

தமிழில் த. வளவன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment