Advertisment

இந்தி அல்லது எந்த மொழியானாலும் கற்றுக்கொள்ள ஒரு வலுவான நடைமுறை காரணம் வேண்டும்

Hindi imposition issue: “ஞான் நின்னே ஸ்நேஹிக்குன்னு” என்று சிறிது பணம் அனுப்பிய வெளிநாட்டில் இருக்கும் தனது கணவரிடம் மனைவி கூறுகிறார். இதன் பொருள் என்ன என்பதை அறிய நீங்கள் 2018-இல் வெளிவந்த ஃபோன்பே விளம்பரத்தைப் பார்க்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hindi imposition, hindi language, amit shah on hindi diwas, amit shah appeals for hindi language, anti Hindi agitation, இந்தி திணிப்பு, அமித்ஷா, இந்தி எதிர்ப்பு, hindi promotion, hindi diwas 2019, hindi as official language, status of hindi, india news, Tamil indian express

Hindi imposition, hindi language, amit shah on hindi diwas, amit shah appeals for hindi language, anti Hindi agitation, இந்தி திணிப்பு, அமித்ஷா, இந்தி எதிர்ப்பு, hindi promotion, hindi diwas 2019, hindi as official language, status of hindi, india news, Tamil indian express

எம்.ராஜிவ்லோசன், கட்டுரையாளர்,

Advertisment

பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர், சண்டிகர்

Hindi imposition issue: “ஞான் நின்னே ஸ்நேஹிக்குன்னு” என்று சிறிது பணம் அனுப்பிய வெளிநாட்டில் இருக்கும் தனது கணவரிடம் மனைவி கூறுகிறார். இதன் பொருள் என்ன என்பதை அறிய நீங்கள் 2018-இல் வெளிவந்த ஃபோன்பே விளம்பரத்தைப் பார்க்க வேண்டும். இது இன்னும் யூ டியூப்பில் கிடைக்கிறது. விளம்பரம் என்ன குறிப்பிடுகிறது என்றால், வட இந்தியன், இந்தி மொழி பேசுபவர்கள், சரியான ஊக்கத்தொகைக்கு இந்தி தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்வதில் திறமையானவர்கள் என்று. இந்த விளம்பரத்தில் மனைவி தனது கணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வதற்காக தனது மாமியார் முன்னிலையில் கூட மலயாலத்தை சொந்தமாகக் கற்றுக்கொள்கிறார்.

ஒவ்வொரு இந்தி தினத்தின் தொடக்கமும் வருடாந்திர மொழிப் போரின் அசாதாரண காட்சியாக உள்ளது. விரைவில் இது தேசம் மற்றும் தேசத்தின் அத்தியாவசிய பண்புகள் பற்றிய விவாதமாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக, இப்போதெல்லாம், ஒரு வைரஸ் காய்ச்சலைப் போல, போராட்டம் சில நாட்களுக்குப் பிறகு தானாகவே இறந்து விடுகிறது.

இது அனைத்தும் மத்திய அரசின் இந்தித் துறையிலிருந்தும் தொடங்குகிறது. இது இந்தியை நாடு முழுவதும் பரப்பும் பொறுப்பை வழங்கியுள்ளது. இது இந்தியில் எம்.ஏ. படித்தவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது. இது அதிகாரப்பூர்வமாக “ராஜ்பஷா விபாக்” (அதிகாரப்பூர்வ மொழித்துறை) என்று அழைக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலமும் இந்தியாவின் ராஜ்பாஷா என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். ஆனால், அதை ஊக்குவிக்க எந்த துறையும் இல்லை. அது புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் அரசாங்கத்திடமிருந்து சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் உத்தரவுகளை உருவாக்குவதற்கு உதவ ஆங்கிலத்தில் எம்.ஏ.படித்தவர்களை சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழித்துறையாக இல்லாத நிலையில், இந்திய சட்டங்களின் மொழி, அதை வரைவு செய்பவர்களுக்கேகூட புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. சட்டத்தின் பின்னால் உள்ள நோக்கம் நல்லதாக இருக்கலாம், ஆனால், சட்டத்தில் எழுதப்பட்டதைப் புரிந்துகொள்வதற்கு கெளரவமான நீதி மன்றங்களின் ஞானம் தேவைப்படுகிறது. இதுபோன்றவைகளுக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சட்ட வரலாற்றியல் பற்றியது. ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் விவாதித்து 370 வது பிரிவை ஓரளவு மாற்றியமைத்தது. இது பயங்கரமான எழுத்துப்பிழை மற்றும் இலக்கண தவறுகள் நிறைந்தது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் சரியான பதிப்பை அரசாங்கம் வெளியிட கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது.

மத்திய அரசு அலுவலகங்களில், இந்தி அல்லாத பகுதிகளில், ஒரு இந்தி அதிகாரியும், மீண்டும் இந்தியில் எம்.ஏ. படித்தவரும் இருக்கிறார். அந்த அலுவலகத்திற்குள் இந்தி மொழியை ஊக்குவிப்பதே அதன் ஒரே பணி. இதுபோன்ற பல அலுவலகங்களில், இந்தி அதிகாரிக்கு சற்று மனசாட்சி உள்ள இடத்தில் இந்தி பலகையும் உள்ளது. அதோடு, அதில் ஊழல் புகார்கள் வந்தால் தொடர்பு கொள்வதற்கு அதிகாரியின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டிருக்கும். இது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிவுறுத்தல்களால் ஊழல் தடுப்பு வாரியத்தின் ஒருவிதமான சட்டரீதியான விஷயமாக உள்ளது. இந்தி வாரியம் ஒரு தன்னார்வ முயற்சியாகும். உதாரணமாக, பஞ்சாப் பல்கலைக்கழக அலுவலகங்களில் அத்தகைய இந்தி போர்டு இல்லை.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழித்துறை இந்தி தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியை ஊக்குவிக்கும் பணியைத் தொடங்குகிறது. அதன் முயற்சிகளை யாரும் கவனிக்கவில்லை. அதன் முயற்சிகளின் தெளிவான விளைவுகள் எதுவும் இல்லை அல்லது குறைந்தபட்சம் ஆராய்ச்சி செய்யப்படவில்லை அல்லது ஆவணப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து வரும் இந்தி தினத்தில் யாரோ ஒருவர் இந்தி சூழலில் ஒரு மேம்பட்ட கருத்தை கூறுகிறார். இந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இதுதான். முன்னதாக ப.சிதம்பரம், பி.வி.நரசிம்மராவ், ஆர். வெங்கடராமன் மற்றும் பிற உள்துறை அமைச்சர்கள் இதே போன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்வதற்கான ஒரே காரணம், அந்தத் துறை அவர்களின் பொறுப்பில் வருகிறது. பெரும்பாலும், இந்த கருத்து குறிப்பாக அமைச்சர் ஒரு தென்னிந்தியராக இருக்கும்போது, ஒரு திராவிட மொழியுடன் இணைக்கப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காலங்கள் உள்ளன. 1960-களின் நடுப்பகுதியில், குல்சரிலால் நந்தா உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாட்டின் பல பகுதிகளிலும் கலவரத்தை ஏற்படுத்தியது.1965 ஆம் ஆண்டில், ஆங்கில மொழி அரசாங்கத்திலிருந்து விலகியது என்றும் இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி வந்தது என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவில் ஆட்சி. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் படத்தின் தொடக்க காட்சிகள், சாத் இந்துஸ்தானி, இதுபோன்ற ஒரு கலவரத்தைக் கொண்டுள்ளது. தென்னிந்திய நகரங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு கலவரங்கள் பீகார், உ.பி. மற்றும் மத்திய பிரதேச சந்தைகளில் நடந்த ஆங்கில எதிர்ப்பு கலவரங்களுக்கு இணையாக இருந்தன. சொத்துக்களை எரிக்கும் ஆவல் இரு செட் கலகக்காரர்களுக்கும் பொதுவானது. எந்தவொரு மொழியையும் கற்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அமிதாப் பச்சன் நடித்த சாத் இந்துஸ்தானி படத்தின் தொடக்க காட்சிகள் இதுபோன்ற ஒரு கலவரத்தைக் கொண்டுள்ளது. தென்னிந்திய நகரங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு கலவரங்கள் பீகார், உ.பி. மற்றும் மத்திய பிரதேச சந்தைகளில் நடந்த ஆங்கில எதிர்ப்பு கலவரங்களுக்கு இணையாக இருந்தன. சொத்துக்களை எரிக்கும் ஆவல் இரு தரப்பு போராட்டக்காரர்களுக்கும் பொதுவானது. எந்தவொரு மொழியையும் கற்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை.

அதிர்ஷ்டவசமாக, இப்போதெல்லாம் இந்தி தினத்தில் உருவாகும் கூச்சல்கள், சில முழக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பாட்டியாலாவில் நடந்ததைப் போல, ஒரு சில இந்தி கைகூலிகள் இந்தி அல்லாத மொழிகளில் அவமானப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கச் செய்தார்கள். பாட்டியாலா பகுதியில் பஞ்சாபி அவமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சில வாரங்களுக்குப் பிறகு, அனைவரும் இந்தி பற்றி மறந்து விடுகிறார்கள். அதைப் பயன்படுத்த விரும்புவோர், அதைப் பயன்படுத்துங்கள்; அதை புறக்கணிக்க விரும்புவோர் அதை புறக்கணிக்கிறார்கள். யாரும் உண்மையில் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கவலைப்படுவதில்லை. ஒரு மொழி, எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களிடையே தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனமாகும். இது நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு புள்ளி. ஃபோன்பே விளம்பரத்தைப் போலவே, இந்தியாவில் வெடிக்கும் வருடாந்திர சண்டையின் பின்னணியில், அரசாங்கத்தில் யாரோ ஒருவர் அனைவருக்கும் இந்தி திணிப்பதாக உறுதியளித்ததால், அதன் புள்ளி வெறுமனே இதுதான்: ஒரு மொழியை ஒருவர் கற்றுக்கொள்ள வலுவான காரணம் இருக்க வேண்டும். இல்லையெனில், கற்றறிந்தவர்களைத் தவிர வேறு யாரும் புதிய மொழியைக் கற்க நேரத்தை வீணடிக்கத் தயாராக இல்லை. கடந்த காலத்தில், ஒரு பொதுவான இந்தியர் குறைந்தது மூன்று மொழிகளையாவது அறிந்திருப்பதாகக் கூறப்பட்டது. பெரும்பாலான இந்தியர்கள், இன்றும் கூட அப்படி செய்கிறார்கள். மகாத்மா காந்திக்கு ஐந்து மொழி தெரியும். நரசிம்மராவ் 10 மொழிகளை அறிந்திருந்தார்.

இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது இந்தி அல்லது ஆங்கிலத்தை பயன்படுத்தினாலும் அது ஒரு எளிய மொழி ஆணையத்தை” நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எந்தவொரு விதிமுறை, சட்டம், உத்தரவுகளும் எளிமையாக எழுதப்படவில்லையெனில், எந்தவிதமான மாற்றங்களும் இல்லாத சட்டப்பூர்வமான பொது மொழி தேவையில்லை. அது ஒரு பத்தாவது தேர்ச்சி பெற்றவரால்கூட புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களிலும் 90 சதவீதமாக உள்ளனர்.

தமிழில் - பாலாஜி எல்லப்பன்

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment