எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவித்தொகை திட்டம்; மகாராஷ்டிரா, கர்நாடகாவை விட பின்தங்கிய தமிழ்நாடு!
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சமூகநீதியில் முன்னோடி மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சமூகநீதியில் முன்னோடி மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இத்திட்டத்தில் உள்ள நடைமுறைகள் முன்னோடி மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவற்றைக் கூட முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
மருத்துவர் மாரிராஜ், கட்டுரையாளர்
Advertisment
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழக அரசால் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவின்போது அரசு உதவியுடன் வெளிநாடு சென்று படிப்பதற்கான நிதி உதவி அரசாணை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இத்திட்டம் வரவேற்கக் கூடியது என்றாலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. குறிப்பாக இத்திட்டமானது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், சமூகநீதியில் முன்னோடி மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இத்திட்டத்தில் உள்ள நடைமுறைகள் முன்னோடி மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவற்றைக் கூட முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
குறிப்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் அரசே வழங்குகிறது. அதுபோக இதர செலவுகளுக்கு என்று மகாராஷ்டிரா 12 லட்சம் ரூபாயும், கர்நாடகா 8 லட்சம் ரூபாயும் வழங்குகிறது. இதுபோக புத்தகம், விசா கட்டணம், மற்றும் விமான கட்டணம் போன்றவையும் தனியாக வழங்கப்படுகிறது.
Advertisment
Advertisements
எல்லாவற்றிற்கும் முன்னோடி மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்தில் கல்வி கட்டணம், இதர கட்டணம், விசா கட்டணம் மற்றும் விமான கட்டணம் அனைத்திற்கும் சேர்த்து ஆண்டிற்கு 36 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்லூரிகளில் தங்கள் சேர்க்கையை உறுதி செய்த பின்னரும் அதிக கட்டணம் காரணமாக அந்த கல்லூரிகளில் சேர முடியாத சூழலும் அதன் பொருட்டு அரசின் நிதி உதவி போக மீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் வாங்கும் சூழலும் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் அரசே வழங்குகிறது. அதுபோக இதர செலவுகளுக்கு என்று மகாராஷ்டிரா 12 லட்சம் ரூபாயும், கர்நாடகா 8 லட்சம் ரூபாயும் வழங்குகிறது. இதுபோக புத்தகம், விசா கட்டணம், மற்றும் விமான கட்டணம் போன்றவையும் தனியாக வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 150 இளங்கலை மாணவர்களுக்கும், 250 முதுநிலை மாணவர்களுக்கும் அதுபோக முனைவர் படிப்பிற்கு விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொருத்தும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அத்தகைய குறிப்பிட்ட எண்ணிக்கை ஏதும் அரசால் நிர்ணயிக்கப்படவில்லை. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் 120 மாணவர்கள் மட்டுமே பலன் பெற்று இருக்கிறார்கள்.
இதுபோக கர்நாடக மாநிலத்தில் பயன்பெறும் மாணவர்களில் பெண்களுக்கு என்று 33 சதவீதமும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதமும் சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு திட்டம் எதுவும் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை.
குடும்ப வருமான உச்ச வரம்பை பொருத்தமட்டில் 8 லட்சத்திற்கும் குறைவான மற்றும் 8 முதல் 12 லட்சம் உள்ள மாணவர்களுக்கு தமிழகத்தில் ஆண்டுக்கு முறையே 36 லட்சமும் மற்றும் 24 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது .
ஆனால் கர்நாடகாவில் குடும்ப வருமானம் 8 லட்சம், 8 லட்சம் முதல் 15 லட்சம், 15 லட்சம் முதல் 25 லட்சம் உள்ள மாணவர்களுக்கு முறையே 100 சதவீத மானியம், 50 சதவீத மானியம், 33 சதவீதம் மானியம் என்று வழங்கப்படுகிறது.
இத்திட்டமானது கர்நாடக மற்றும் மகாராஷ்டிராவில் இணைய வழியாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லாத காரணத்தினால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை அரசு அதிகாரிகளால் மாணவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
மேலும், தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான விசா கட்டணம், விமான கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான எந்தத் தொகையும் அவர்கள் சேர்வதற்கு முன்பே வழங்கப்படாததால் ஏழை எளிய மாணவர்கள் இத்தகைய கட்டணங்களுக்கு கடன் வாங்கும் சூழல் இருக்கிறது. மேற்கண்ட தொகைகளை தமிழக அரசு ஒரு மாதம் கழித்தே வழங்குவதால் புதிதாக வெளிநாடு சென்ற மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
சமூகநீதியில் முன்னோடி என்று சொல்லக்கூடிய தமிழக அரசு இத்திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கி இருப்பதால் அதை களைவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
1.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல முழுமையாக வழங்க வேண்டும். அதுபோக இதர செலவுகளுக்கான கட்டணம், விசா கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் விமான கட்டணம் ஆகியவற்றை தனியாக வழங்க வேண்டும்.
2.இத்திட்டத்தில் இளநிலை மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுபோல பெண்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
3.குறைந்தபட்சம் 150 இளநிலை மாணவர்களுக்கும் 250 முதுகலை மாணவர்களுக்கும் 10 முனைவர் மாணவர்களுக்கும் இத்திட்டமானது செயல்படுத்தப்பட வேண்டும்.
4. குறைந்தபட்சம் விமான கட்டணம் மற்றும் விசா கட்டணம் கட்டணத்தை அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே வழங்க வேண்டும்.
இந்தக் கட்டுரையை எழுதியவர் மருத்துவர் மாரிராஜ், பொது அறுவைசிகிச்சைத் துறை நிபுணர்