Advertisment

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய தருணம்  

ப சிதம்பரம் : நாம் அனைவரும் பங்கு பெறும் திறந்த, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தின் பாதையில் இருந்து நம்மால் விலகி செல்ல முடியாது. இந்த பாதையானது தற்கொலைக்கு சமமானதாக இருக்கும். ஆனாலும் கூட, நாம் பங்கெடுத்து உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, நமது பொருளாதாரக் கொள்கைகளை சீரமைக்க வேண்டும். அதற்கு 1991ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலான தைரியம், தெளிவு மற்றும் வேகம் தேவை

author-image
WebDesk
New Update
பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய தருணம்  

ப சிதம்பரம்

Advertisment

கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தாராளமயமாக்கல்  கொள்கைகளை  அறிமுகப்படுத்தியதில் இருந்து, நாடு  பண  உருவாக்கம், புதிய தொழில்கள், புதிய தொழில் முனைவோர், ஒரு பெரிய நடுத்தர வர்க்கம், லட்சக்கணக்கான  கணக்கான வேலைகள், ஏற்றுமதி என மற்றும் 270  மில்லியன் மக்களை வறுமைக் கோட்டில் இருந்து தப்ப வைப்பது என்ற  அடிப்படையில் செயல்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் செய்து 31 ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை  என்னால் நம்ப முடியவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு 1991 ஜூலை மாதம் முதல் தேதி இந்திய அரசால் குறைக்கப்பட்டது. அது மிகவும் செயல்திறன் மிக்க  பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய முடிவு. இது வெளிப்படையாக  பலராலும் கண்டிக்கப்பட்டது.   இந்த பொருளாதார நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமாக எதிர்த்ததால், சீர்திருத்த நடவடிக்கையின் அடுத்த கட்டங்களை சில காலத்துக்கு செயல்படுத்தாமல் இருக்க  அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் விரும்பினார். பிரதமரின் விருப்பப்படி அடுத்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதைப் போல  நிதியமைச்சர் மன்மோகன் சிங் ‘நடந்து கொண்டார்.  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் சில நாட்களுக்கு யார் கண்ணிலும் படவே இல்லை.  அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக மீண்டும் ஒருமுறை ரூபாயின் மதிப்பு மேலும் குறைக்கப்பட்டது.  

அந்த நடவடிக்கைக்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும் இரண்டே வார்த்தையில் சொல்லிவிடலாம், முழுக்க முழுக்க துணிச்சல் மிக்கது. அடுத்தடுத்த நடவடிக்கைகளாக  தடையற்ற வர்த்தக கொள்கை, தாராளமய தொழில் உற்பத்தி கொள்கை ஆகியவற்றை அறிவித்தது அரசு; புதிய பாதையைக் காட்டும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையையும் வரிகளைக் குறைத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் தயாரித்தது. உலகமே நிமிர்ந்து உட்கார்ந்து இந்திய அரசின் துணிச்சலையும் தெளிவையும் வேகத்தையும் கவனத்தில் கொண்டது. இதனால் உலக அரங்கில் இந்தியா கம்பீரமாக தலை நிமிர்ந்து  நின்றது.  

வெளிப்படையான சந்தைக்கு ஆதரவு

காங்கிரஸ் தலைமையிலான அரசு பொருளாதாரத்தில் தாராளமயக் கொள்கையை கடைப்பிடித்தது. இதனால் நாடு பல்வேறு துறைகளில் ஏராளமான நன்மைகளை பெற்றது. நாட்டின் செல்வ வளம் பெருகியது, புதிய தொழில்கள், புதிய தொழில் முனைவோர்கள் உருவாக முடிந்தது. நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகமானது.  கோடிக்கணக்கான புதிய, உயர் வருவாய் தரும் வேலை வாய்ப்புகள் உருவாயின.  ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்தது. 27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

வறுமையும் பட்டினியும் அதிகம்

ஆனாலும்  கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழே தான் வாழ்கின்றனர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. நாட்டில் உணவு கிடைக்காததால் பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை  இன்றும் உள்ளது. உலக பட்டினி குறியீட்டெண் 2021 இல், இந்தியா 101 வது இடத்தில் உள்ளது, மொத்தமுள்ள பட்டினியால் வாடும்  நாடுகள் 116. பெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு நாடு முழுக்க இருப்பதை தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5  வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  ஆண்டுதோறும் வெளியிடப்படும் வருடாந்திர கல்வி ஆண்டறிக்கைப்படி ஏழைக் குழந்தைகள் தாங்கள் பயிலும் வகுப்புக்கேற்றபடிக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களை புரிந்து கொள்ள முடியாத படிக்கு குறைபாடுகள் தொடர்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது.  குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொருட்களின் விலையேற்றம் இருக்கிறது.  மக்களுடைய வருமானம், செல்வம் ஆகியவற்றிலும் ஆண்,பெண்   இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து இருக்கிறது. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகி வருகின்றன. மக்களில் பல பிரிவினருக்கு நாட்டின் வளர்ச்சியில் சமமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  வெளிப்படையான, தடைகள் ஏதுமற்ற, சந்தை அடிப்படையிலான பொருளாதாரப் பாதையிலிருந்து நம்மால் இப்போது விலகிச் செல்ல முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. இருப்பினும் உலக அளவிலும் உள்நாட்டிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளில் மறுசீரமைப்பு  செய்வது அவசியம். அதற்கு 1991 ம் ஆண்டு இல் இருந்ததைப் போன்ற துணிச்சலும், தெளிவான பார்வையும் வேகமும் அரசுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

உலகம் மற்றும்  உள்நாட்டு மாற்றங்கள்

உலக அளவில் மாற்றங்களைப் பரிசீலித்தால்  பணக்கார நாடுகள் மேலும் பணக்கார நாடுகளாகிவிட்டன. சீனாவுக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துவிட்டது. 2022 ல் சீனாவின் ஒட்டுமொத்தப பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) 16.7 டிரில்லியன் டாலர்களாக இருக்கும். இந்தியாவின் ஜிடிபி 3 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே. டிஜிட்டல்  தொழில்நுட்பம் மனிதர்களுடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும்  இருக்கும். புள்ளிவிபரங்கள் தான் நாடுகளுக்கு இனி புதிய செல்வமாக அமைய போகிறது. இயந்திரங்கள் உதவியுடன் உற்பத்தி செய்தல், மனித இயந்திரப் பயன்பாடு, இயந்திரக் கற்றல் மூலம் பெறப்படும் அறிவு, நுண்ணறிவு போன்றவை தான்  இனி உலகில் ஆதிக்கம் செலுத்தும். மனிதர்களால் செய்யக்கூடியவை.  புதிய உலகில் இனி 5 ஜி தொழில்நுட்பம், இணையதளம் 3.0, பிளாக்செயின், மெட்டாவெர்ஸ் மற்றும் மனிதகுலம்  அறியாத நவீனங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும்.   பருவநிலை மாறுதல்கள் கடும்  விளைவுகளை உலகம் மீது ஏற்படுத்தும். அதைச் சமாளிப்பது மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகத் திகழும். எரிபொருள்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு  எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். பிறகு இந்த உலகம்  நிலைத்திருக்கவும் நம்முடைய அன்றாடப் பிழைப்பு  இடையூறு இல்லாமல்  தொடரவும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஆக வேண்டிய நிலை ஏற்படும். உள்நாட்டு நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரிப்பு வீதம் 2.0 ஆகக் குறைந்திருக்கிறது.15 வயதுக்கும் கீழுள்ள மக்கள் எண்ணிக்கை 2015-16 ல் 28.6 சதவிகிதமாக  இருந்தது, இப்போது 26.5 சதவீதமாக  குறைந்து விட்டது. இளவயது மக்கள் தொகையால் சமூகத்துக்குக் கிடைக்கக்கூடிய லாபம்  குறையத் தொடங்கியதையே  இது காட்டுகிறது. விவசாயிகளின் சராசரி உற்பத்தி அளவு அதிகரித்திருக்கிறது. இருந்தும் அவர்களுடைய பொருளாதார அந்தஸ்து மாறாமலேயே நீடிக்கிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மக்கள் கருதுவதில்லை, தங்களுடைய அடுத்த தலைமுறையினரும் விவசாயத்தில் ஈடுபடுவதை இப்போது விவசாயிகள்  விரும்புவதில்லை. நகரமயமாதல் வேகமாக நடைபெறுகிறது, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்ட விகிதமும் உயர்ந்துவருகிறது. டிஜிட்டல் மயம் விரிவடைகிறது. அதனால் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும்,  பணக்காரர்களுக்கும் இடையிலான பிளவு அதிகரிக்கிறது. பெரும்பான்மையின ஆதிக்கம், மத அடிப்படையில் மக்களிடையே பிளவு, சமூகத்தில் சில பிரிவினருக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்புணர்வு போன்றவை பொருளாதாரத்தைப் பெருமளவு சேதப்படுத்திவிடும். நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளிலிருந்து 20% மக்களை விலக்கி வைக்கும் எந்த நாடும் பொருளாதார வல்லரசாக முடியாது.

தனிமைப்படுத்தப் படுத்தல்  தோல்விக்கான வழி

எல்லாவிதக் கொள்கைகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது கட்டாயம். வேலைவாய்ப்பு பெருகாத பொருளாதார வளர்ச்சியை நாடு ஏற்காது. அதிலும் குறிப்பாக, வேலைவாய்ப்பில் வளர்ச்சியே இல்லாத கடந்த சில ஆண்டு கால பொருளாதார வளர்ச்சியை ஏற்க முடியாது. பொருளாதார வளர்ச்சி என்பதன் அடிப்படையே வேலைவாய்ப்பு பெருகுவதாக தான் இருக்க முடியும். வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் தான் பிற துறைகளில் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியும். ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மிகவும் உன்னதமான வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பக்கோடா தயாரித்து விற்பது கூட வேலைவாய்ப்புதான் எனப் பரிதாபகரமான விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. நல்ல எதிர்காலம் அமையும் என்கிற நம்பிக்கையில் கடுமையாக உழைத்து, வருமானத்தையெல்லாம் கொட்டி தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்த குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெருகாததால் மோடி அரசால் நட்டாற்றில் விடப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும் மோடி அரசு தேர்தலில் தண்டிக்கப்படாமல் தப்பிக்க கூடும், இந்துத்துவக் கருத்துகளைச் சொல்லி மக்களின் கவனத்தை திசைதிருப்பி வெற்றி பெறக்கூடும். இந்துத்துவக் கருத்துகளால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி விட முடியாது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய சமூகத்தவர்கள் அல்லது பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது மதங்களையே விரும்பாத நாத்திகக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விரைவில் உணர்வார்கள்.

இந்த கலந்துரையாடல்  ஒன்றியம்  மற்றும்  மாநில அரசுகளுக்கு இடையில் மாறிவிட்ட உறவு நிலைமைக்கு தவிர்க்க முடியாத படிக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு முன்னால் எப்போதும் இப்படி ஒன்றியம் மற்றும்  மாநில அரசுகளின்  உறவுகளை சிக்கலாக்கியதில்லை.  மாநிலங்களின் நிதி நிலைமையும் இதற்கு முன்னால் எப்போதுமே இப்படி கவலைக்குரியதாக இருக்கவில்லை. தனித்துவமான வருவாய் தீட்டும்  பாதைகள்  மாநில அரசுகளுக்கு  குறைந்து விட்டது.  பொது சரக்கு சேவை வரி  தொடர்பாக அனைத்து இடங்களிலும் கடுமையான அதிருப்தியே நிலவுகிறது. அதை ஒன்றிய அரசு நிர்வகிக்கும் விதம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை மிகுந்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதைப் போல பொது சரக்கு, சேவை வரி விதிப்பு முறையிலிருந்து மாநிலங்கள் வெளியேற வேண்டும் என்கிற குரல்கள் கூட கேட்கத் தொடங்கி விட்டன. மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசு  தன் கையில் எடுக்க தொடங்கி விட்டது.  இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை. ஒன்றிய அரசு தனது  நிதி அதிகாரங்களை பயன்படுத்தி மாநிலங்களை  பணிய வைக்கிறது. மோடி அரசின் கொள்கைகள் மட்டுமல்ல, அது தேர்ந்தெடுத்த பாதையும் கூட்டாட்சி தத்துவத்தை உருக்குலைத்து விடும். 

தமிழில் த. வளவன் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment