Tamil Nadu Governor RN Ravi’s conduct in assembly is unseemly; ill serves his high office, சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு பொருத்தமற்றது; உயர் பதவியின் குறைவான வெளிப்பாடு | Indian Express Tamil

சட்ட மன்றத்தில் ஆளுனரின் பொருத்தமற்ற செயல்பாடு; அந்த உயர் பதவிக்கு உரியது அல்ல

கவர்னர் ஆர்.என்.ரவியின் எல்லைமீறல் மாநிலங்கள் முழுவதும் பா.ஜ.க.,வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்ட ஒரு வடிவத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அவர்கள் பா.ஜ.க அல்லாத அரசாங்கங்களுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்

சட்ட மன்றத்தில் ஆளுனரின் பொருத்தமற்ற செயல்பாடு; அந்த உயர் பதவிக்கு உரியது அல்ல

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் கவர்னர் உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்துவிட்டு படித்த நிலையில், அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையில் இருந்து விலகுவதை முதல்வர் ஸ்டாலின் ஆட்சேபித்ததால், அவர் அவையை விட்டு வெளியேறியது, அவரது உயர் பதவியை சாதகமற்ற வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டப்பேரவையின் புதிய அமர்வின் தொடக்கத்திற்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரை என்பது, அரசாங்கத்தின் நோக்கத்தின் அறிக்கையாகும். கவர்னர் அதை முழுமையாக வாசித்ததாக மரபு இருக்கிறது. பி.ஆர்.அம்பேத்கர் தவிர, பெரியார் ஈ.வி.ராமசாமி, முன்னாள் முதல்வர்கள், காங்கிரஸின் கே.காமராஜ், தி.மு.க.வைச் சேர்ந்த சி.என்.அண்ணாதுரை, எம்.கருணாநிதி உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களைப் பற்றி குறிப்பிடும் பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டார். திராவிட ஆட்சி முறை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான மாநில அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் அவர் குறிப்பிடவில்லை. இந்தப் பெயர்கள் அல்லது குறிப்புகள் எதுவும் சர்ச்சைக்குரியவை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை அல்லது வெளிப்படையான தவறானவை என்று விவரிக்க முடியாது. கவர்னர் ஆர்.என்.ரவி அவற்றை ஏன் ஆட்சேபனைக்குரியதாகக் கண்டார் என்பது தெரியவில்லை.

2021 செப்டம்பரில் அவர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே சிக்கலான உறவு உள்ளது. பல கொள்கை விஷயங்களில் மாநில அரசுடன் கவர்னர் பகிரங்கமாக உடன்படவில்லை. கவர்னர் நீட் மீதான அரசாங்கத்தின் எதிர்ப்பை ஏற்க மறுத்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு டஜன் மசோதாக்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது, ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின், மத்திய அரசின் உத்தரவின்படி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ராஜ்பவனில் நடந்த ஒரு விழாவில் கவர்னர் தெரிவித்த கருத்தான, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் மாநிலத்திற்கு பொருத்தமான பெயர் என்று கூறியதை தி.மு.க விமர்சித்தது, மேலும் அவர் மாநில அரசியலில் தலையிடுவதாக குற்றம் சாட்டியது. ஆர்.என்.ரவியின் பரிந்துரையின் உட்பொருள் நுணுக்கமற்றது, தமிழ்நாடு என்ற பெயர் தனித்துவம் கொண்ட பரப்பைக் கொண்டது, மேலும் இது தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றைக் கருத்தில் கொண்டு சர்ச்சையை ஈர்க்கும். மொழிவழித் தேசியத்தை முன்னிறுத்திய தி.மு.க, 1969-ல் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது. பா.ஜ.க.,வுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்பட்ட அ.தி.மு.க.,வும் கூட, ஆளுநரை விமர்சித்தது, ஏனெனில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கருத்தைக் கேள்வி எழுப்பியதன் மூலம் ஆர்.என்.ரவி அரசியல் லட்சுமண ரேகையைக் கடந்ததாகக் கருதுகிறது. தமிழ் துணை தேசியம் இன்று இந்திய தேசியவாதத்துடன் சமாதானமாக உள்ளது. திராவிட இயக்கத்தின் கருத்தியல் வேர்கள் குறித்த ஆர்.என்.ரவியின் அசெளகரியத்தின் வெளிப்பாடு அவரது அலுவலகத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரது எல்லைமீறல் மாநிலங்கள் முழுவதும் பா.ஜ.க.,வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்ட ஒரு வடிவத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. மகாராஷ்டிராவில் பகத் சிங் கோஷியாரி அல்லது கேரளாவில் ஆரிப் முகமது கான், அவர்கள் பா.ஜ.க அல்லாத அரசாங்கங்களுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு தான் நியமித்திருந்தாலும், ஆளுநரின் செயல்களுக்கு நேரடியாகப் பொறுப்பேற்காது. ஆனால் தற்போதைய நிகழ்வுகள் தமிழகத்தில் மத்திய அரசிற்கு எதிரான உணர்வுகளை வலுப்படுத்துவதில் முடிவடையும், முரண்பாடாக பிரதமரும் அவரது கட்சியும் மாநிலத்தை அடைய முயற்சிக்கும் நேரத்தில், பா.ஜ.க.,வின் இந்தி-இந்துத்துவா பற்றிய கவலையை தணிக்கும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தனது தொகுதியில் ஒரு மாத கால காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்தார், இது முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வாரணாசியை மையமாகக் கொண்ட இந்து மரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியாகும். இந்தத் திட்டமானது, மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பரந்த இந்திய பிரச்சாரத்தில் வைக்கும் கலாச்சார முயற்சிகளை உள்ளடக்கியது. ஆர்.என்.ரவியின் நடத்தை அவரது அரசியல் சாசன பதவியை காயப்படுத்துகிறது. தமிழகத்தில் பா.ஜ.க தனது அரசியல் தடத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளின் பின்னணியில் இது ஒரு முரண்பாடான குறிப்பைத் தாக்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu governor ravis conduct in assembly is unseemly ill serves his high office