/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-143951-2025-07-22-14-41-37.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144011-2025-07-22-14-41-52.png)
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே அனைவரையும் தனது திறமையால் உடல் அசைவுகளாலும், முக பாவனையாலும் சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144020-2025-07-22-14-41-52.png)
வடிவேலுவை போலவே இருப்பதால் இவரை அனைவரும் வடிவேலு பாலாஜி என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர் மறைவுக்கு, தான் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக அவரின் மகன் கண்ணீருடன் பேசி உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144033-2025-07-22-14-41-52.png)
விஜய் தொலைக்காட்சியின் அடையாளமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி, தனது நகைச்சுவையால் பலருடைய மனதில் இடம் பிடித்த இவர், பலரை கவலை மறந்த சிரிக்க வைத்து, மனதில் இருந்த துன்பத்தை நீக்கிய நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144101-2025-07-22-14-41-52.png)
இவர் விஜய் டிவியில் கலக்கப்போது யாரு, சிரிச்சா போச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பலரை சிரிக்க வைத்துள்ளார். தொலைக்காட்சி மட்டுமில்லாமல், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா போன்ற என்ன படங்களிலும் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144115-2025-07-22-14-41-52.png)
அவர் இறந்த பின் வடிவேலு பாலாஜின் மகன் ஸ்ரீகாந்த் தற்போது மிகுந்த வருத்தத்துடன் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார். "அப்பா இருந்த வரை, எந்தவிதமான கஷ்டமும் தெரியாமல் என்னை வளர்ந்து விட்டார். ஆனால், அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது" என்றும் கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-143951-2025-07-22-14-42-02.png)
"நான் இப்போது தான் ஒரு வண்டி வாங்கினேன், அதன் ஈஎம்ஐ கூட என்னால் கட்ட முடியவில்லை, அதை கட்டுவதற்கே கஷ்டப்படுகிறேன். அப்பா உயிரோடு இருந்த இருந்தால், அவரே வண்டியை வாங்கி கொடுத்து இருப்பார்."
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-144206-2025-07-22-14-42-19.png)
"ஆனால், அவர் இப்போ உயிரோடு இல்லை. என்னோட ஆசை எல்லாம், அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.