/indian-express-tamil/media/media_files/2025/05/06/yquw9BvxJKyk2vERAVZH.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/17/JGEXPhDs30rrEWcWAXCy.jpg)
நீங்கள் செரிமான கோளாறால் அவதிப்படும் நபராக இருந்தால், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது மிகவும் நல்லது. நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த நெல்லிக்காயை ஜூஸ் செய்து குடிப்பது செரிமானம் சிறப்பாக இருக்க பெரிதும் உதவுகிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்க மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/u5BO60h4OroY2r4aLcAl.jpg)
முடி உதிர்வு மற்றும் முன்கூட்டியே முடி நரைப்பது இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை. இதற்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும். நெல்லி ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முடி உதிர்வை தடுக்கலாம் மற்றும் முடி வளர்ச்சியை இது தூண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-22T163705.057.jpg)
தங்களின் உடலில் உள்ள கூடுதல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது சிறந்த பலனை தரும். நெல்லியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த ஜூஸ் உடலில் வைட்டமின் சி-யை தக்கவைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/moLVqJ0FvnyRouteL4Ny.jpg)
நெல்லி ஜூஸ் பருகுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நிலையை சிறப்பாக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், நாள் முழுவதும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்.
/indian-express-tamil/media/media_files/9JibBmlSfjbu5g0eu5M4.jpg)
நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே நெல்லி ஜூஸை தினசரி குடிப்பது சருமத்தை இளமையாக மற்றும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிப்பது சருமத்தின் அமைப்பை மேம்படுத்த, சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் போன்ற வயதான விளைவுகளை குறைக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/k0PwiEgabPuELIy407us.jpg)
இதை நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு நில்லிக்காயை அப்படியே சாப்பிடலாம். அல்லது இரண்டு நெல்லிக்காயை தண்ணீரில் சீவி போட்டு ஆதை தண்ணீரோடு எடுத்துக்கொள்ளலாம். எந்த வித தடையுமின்றி எந்த வயதினரும், அனைத்து நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.