முதலில் அடுப்பில் கடாய் வைத்து ரவைவை வறுக்க வேண்டும். ரவை வறுபட்டதும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேருங்கள். அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.