/indian-express-tamil/media/media_files/2025/06/02/WyCBDGHOqbnZfkJOvcRG.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/25/Wez3Ujq6tXChaHmlrtVF.jpg)
அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியன் கூறிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/V0J3XrpP46KmsfmbWT9X.jpg)
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/01/hQEgxPctY4tjjTiTkGnu.jpg)
தூக்கமின்மை
உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் தொப்புளில் நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்யவும். மேலும், கால் பெருவிரல்களில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் கழித்து தூங்கச் செல்லலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/12/11/BwZGX30uP04t9LkqRDbd.jpg)
கண் வலி
தொப்புளில் தினமும் மூன்று துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும். தூங்குவதற்கு முன்பு, இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/4QEAFXHzUovi1fZm0nKO.jpg)
மூட்டு வலி
மூட்டு வலிக்கு, விளக்கெண்ணெயை தொப்புளில் விட்டு மசாஜ் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/D5xvm5IFLozk1ZsjbxAp.jpg)
தோல் பிரச்னை
வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது. இதை 48 நாட்கள் வரை செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/25/9LRIGxLCp9IQywW0CjUr.jpg)
மாதவிடாய்
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.
/indian-express-tamil/media/media_files/S4jAHiL9JrDuRSjF3bVW.jpg)
வாயுத் தோல்லை
வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/iwAHpHYijEavMVCFwM22.jpg)
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க கீழாநெல்லி மூலிகையை வேருடன் சேர்த்து நன்கு இடித்து அதன் சாற்றை வடிகட்டி தொப்புளில் விடலாம். இவ்வாறு செய்வதால், நாக்கில் கசப்பு தன்மை ஏற்பட்டால், குடல் ஆரோக்கியமாக தான் உள்ளது என்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.