ஜன்னல் கம்பிகள்
முதலில் கொஞ்சம் தண்ணீரில் வினிகர் சேர்த்து பிறகு அதில் நம் தலைக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் கொஞ்சம் சேர்ந்து கலந்து கிளீன் செய்ய பயன்படுத்தும் ப்ரஷில் தெளித்து சுத்தம் செய்தால் ஜன்னல் பளபளப்பாகி விடும்.
நாம் பொதுவாக ஒட்டடை சுத்தம் செய்யும் போது தூசி அதிகமாக பறக்க கூடும். இது நிறைய பேருக்கு ஒத்துக்கொள்ளது. இப்படி கண்டிஷனர் மற்றும் வினிகர் கலந்த தண்ணீரை ஸ்பிரே செய்து ஒட்டடையை சுத்தம் செய்தால் சுலபமாக இருக்கும்.
இந்த முறையில் சுத்தம் செய்யும் போது எவ்வளவு உயரமாக இருந்தால் சுலபமாக சுத்தம் செய்ய முடியும். பேன் இல் உள்ள அழுக்கை கூட நீக்க முடியும் இந்த செய்முறையை வைத்து.
கரப்பான் பூச்சிகளை நீக்குவது எப்படி?
எல்லாருடைய வீட்டுலையும் இருக்கும் ஒரு நீங்காத தொல்லை இந்த கரப்பாண்பூச்கள் தான். ஒரே ஒரு பெருங்காய டப்பாவை வைத்து அதை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பெருங்காய டப்பாவை எடுத்து அதில் பேக்கிங் சோடாவை நிரப்ப வேண்டும். நம் வீட்டில் கிச்சனில் பாத்திரங்களை அடுக்குவதற்கு முன்னாடி இந்த பேக்கிங் சோடாவை நன்றாக தூவி விட வேண்டும். அதற்க்கு மேல் பேப்பரை போட்டு பாத்திரங்களை அடுக்கினால் கரப்பான் பூச்சிகள் வராது.
வீட்டில் உள்ள மரபொருட்களை சுத்தம் செய்வது எப்படி?
வாசலின் இருந்தால் அதை எடுத்து டப்பாவை அப்படியே சூடு தண்ணீரில் போட்டு தண்ணீர் போல ஆகிடுங்க. அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணையை சேர்த்து கலந்து ஒரு ப்ருஷை பயன்படுத்தி உங்கள் மர கதவுகளை மற்றும் மற்ற மர பொருட்களை சுதை செய்யவும்.
டூத் பேஸ்ட் வைத்து இவ்வளவு செய்யலாமா?
டூத் பேஸ்டுடன் கொஞ்சம் வினிகர் சேர்த்து கலந்து அந்த கலவையை ஒரு பக்கெட் நிறைய தண்ணீரில் கலந்து பாத்திரங்களை கழுவினால் புது பாத்திரங்கள் போல் அவை மின்னும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.