கண்களின் கரு விழிகளில் தேசியக் கொடியை, செல்போன் கேமரா மூலம் படமெடுத்த, கோவை கலைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/4
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் பாலச்சந்தர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை, புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
3/4
கணினியில் தேசிய கொடியின் புகைப்படம் டவுன்லோட் செய்து, டெஸ்க்டாப் அருகில் ஒரு நபரை உட்கார வைத்து தேசிய கொடியை உற்று பார்க்க சொல்லியிருக்கிறார்.
Advertisment
4/4
அந்த தேசிய கொடியின் புகைப்படம் கண்களின் கரு விழிகளில் மிக அழகாக வெளிப்படும் பொழுது, தொலைபேசி மேக்ரோ லென்ஸ் எனப்படும் மொபைல் லென்ஸ் பயன்படுத்தி, பாலச்சந்தர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். பாலச்சந்தர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்