இந்த கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த போலிக் ஆசிட் நம் உடலில் உள்ள இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் அதிகமாக இருக்கும் பொழுது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதனால் ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.