உங்க தசை பலம் ஆகணுமா? இந்த வகை நாட்டுக் கோழி பெஸ்ட்: மருத்துவர் சிவராமன்
கடக்நாத் எனப்படும் கருங்கோழி இறைச்சிக்கு ஆஸ்துமா, மூச்சிரைப்பு, உள்ளிட்ட வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாலும் அது மிகவும் நல்லது என்று விரிவாக விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
கடக்நாத் எனப்படும் கருங்கோழி இறைச்சிக்கு ஆஸ்துமா, மூச்சிரைப்பு, உள்ளிட்ட வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாலும் அது மிகவும் நல்லது என்று விரிவாக விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
மத்தியப் பிரதேசத்தின் நாட்டுக்கோழி வகையைச் சேர்ந்தவைதான் கடக்நாத் கருங்கோழிகள். இந்தக் கோழிகளின் உடலில் மெலனின் என்ற நிறமி அதிகம் உள்ளது. இதன் காரணமாக இவற்றின் இறக்கையில் தொடங்கி கறி, ரத்தம், என அனைத்துமே அடர் நிறம் கொண்டவை.
2/6
யுனானி, சித்த மருத்துவம் போன்ற வைத்திய முறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பிக்கப்படுகின்றன. சங்ககால இலக்கிய பாடல்களிலும் கருங்கோழிகளின் மருத்துவ குணங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
3/6
நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கருங்கோழிக்கறி மிகவும் நல்லது. இதன் இறைச்சியில் உள்ள மெலனின் என்ற நிறமியின் காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன.
Advertisment
4/6
இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது.
5/6
ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களும் தங்கள் உணவில் கருங்கோழி இறைச்சியைச் சேர்த்துக்கொள்வது நல்லது. நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
6/6
மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம். பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news