இஞ்சி மற்றும் தேன்
இஞ்சி மற்றும் தேன் சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இவை இருமலிலிருந்து விரைவாக குணமடைய உதவுகின்றன. ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம். இதனால், இருமல், தொண்டைப்புண், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.