/indian-express-tamil/media/media_files/2025/02/03/bsIPZGafIyw53kleEWJf.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/gargle.jpg)
உப்பு கொப்பளித்தல்
சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை குணப்படுத்த முதலில் வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கத் தொடங்குங்கள். இது தொண்டை வலியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தையும் குணப்படுத்தும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை வீக்கம் மற்றும் புண்களில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/03/cdt9cWPkQmZOmN2XjYJh.jpg)
நீராவி
சளி மற்றும் இருமல் காரணமாக மக்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுகின்றது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. இதை சரி செய்ய வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது. வெந்நீரை உங்கள் முகத்திற்கு அருகில் வைத்து நீராவி எடுக்கவும். இது மூக்கு மற்றும் தொண்டையை சுத்தம் செய்து நிவாரணம் அளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/a4aj7hAfvPLWlfcNNokX.jpg)
மஞ்சள் பால்
மருந்தின்றி சளி, இருமலில் இருந்து விடுபட, மஞ்சள் கலந்த பாலை அருந்தத் தொடங்குங்கள். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது. ஒரு டம்ளர் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் சளி விரைவில் குணமாகும்.
/indian-express-tamil/media/media_files/WJervCujwojaEoqxSiFP.jpg)
துளசி மற்றும் இஞ்சி
சளியால் அவதியில் உள்ளவர்கள் முதலில் துளசி மற்றும் இஞ்சியை உட்கொள்ளத் தொடங்குங்கள். துளசியில் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசி இலை மற்றும் இஞ்சியை கஷாயம் செய்து குடிப்பதால் உடல் சூடாக இருப்பதோடு குளிர்ச்சியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/eKUQPJKKTiEt5GSciGTF.jpg)
இஞ்சி மற்றும் தேன்
இஞ்சி மற்றும் தேன் சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இவை இருமலிலிருந்து விரைவாக குணமடைய உதவுகின்றன. ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம். இதனால், இருமல், தொண்டைப்புண், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/03/MyOy9IvILIA49gsNFEns.png)
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரையை வெயிலில் உலரவைத்து குழம்பாக்கி, வத்தலாக்கி சாப்பிடலாம். இது சளி மற்றும் சளி தொற்றை போக்க பயன்படுகிறது. தொண்டை புண் மற்றும் தொண்டை தொற்று தடுக்க மணத்தக்காளி கீரை சாறு உதவுகிறது. இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் பல்வேறு வாய்த்தொற்றுகள் குணமாகும். காசநோயாளிகள் தங்கள் உணவில் அடிக்கடி இந்த கீரையை சேர்த்து வருவது நன்மை பயக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us