New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/26/T20X5g51H6Ze0VB3ouEL.jpg)
நடிகரும் இயக்குனருமான இவர், கிட்டத்தட்ட 30 வருமாக மினிமம் கேரேண்டி படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கும். அந்த காலம் வரை அவர்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும். அதன்பிறகு அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் இப்படி அப்டேட் செய்துகொள்ளாத பல இயக்குனர்கள் இன்றைய சினிமாவில் காணாமல் போயிருக்கிறார்கள்.
அதே சமயம், குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டு ரசிகர்கள் விரும்பும் படங்களை கொடுக்கிறார்கள். அந்த வரிசையில் ஒரு இயக்குனர் கிட்டத்தட்ட 30 வருமாக மினிமம் கேரேண்டி படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய அவர், தனது முதல் படத்தையே பெரிய வெற்றிப்படமாக கொடுத்து, கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில், நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என தனி முத்திரை பதித்துள்ளார். அந்த வரிசையில் வந்தவர் தான் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி.
இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1995-ம் ஆண்டு ஜெயராம் குஷ்பு நடிப்பில் வெளியான முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கவுண்டமணி, மனோரமா, செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து உள்ளத்தை அள்ளித்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த சுந்தர்.சி, ரஜினிகாந்த் நடிப்பில் அருணாச்சலம், கமல்ஹாசன் நடிப்பில் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். வின்னர், கிரி, கலகலப்பு, அரண்மனை சீரிஸ் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு இவர் விஷால் நடிப்பில் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார். சுந்தர்.சி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.