New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/01/95h7rUTNYCE2KwILQgTi.jpg)
எதிர்நீச்சல் சீரியலின் முதல் சீசனில் ஜனனி கேரக்டரில் நடித்து வந்த நடிகை மதுமிதா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார்.
இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் மதுமிதா நடித்த ஜனனி கேரக்டருக்கு வேறொரு நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவர் ஸ்ரீலங்காவில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.