New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/06/S9es9DeUwvQrY0OtVTtf.jpg)
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இச்சிறுவன் இப்போது யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
டிஜிட்டல் உலகில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரது இந்த குழந்தைப் பருவ புகைப்படத்தை பார்த்து, இப்போது இந்நபர் யாரென்று கண்டறிய முடிகிறதா? இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வேறு யாருமில்லை; கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரவிச்சந்திரன் அஷ்வினின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை. தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும், விளையாட்டின் நுணுக்கங்களை ஆழமாக புரிந்துகொண்டு, தனது திறமைகளை பற்றிய கூர்மையான அறிவுடன் அஷ்வின் செயல்பட்டார்.
அனில் கும்ப்ளே ஓய்வுபெற்ற பின்னரும், ஹர்பஜன் சிங் தனது ஆதிக்கத்தை இழந்த காலத்திலும் இந்தியாவின் வெற்றிக்காக அஷ்வின் மிகவும் தேவைப்பட்டார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் ஒன்பது முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 300 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தியவர் என்ற சாதனையையும், முத்தையா முரளிதரனுக்கு பிறகு 400 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர், அனில் கும்ப்ளேவுக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.