/indian-express-tamil/media/media_files/2025/07/03/istockphoto-2197431508-640x640-1-2025-07-03-16-29-12.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/29/GpQvJyZ2YDoBekK2R8Ig.jpg)
வறட்சியான செம்பட்டை நிறம் உடைய கூந்தலை உடையவர்கள் ஆமணுக்கு எண்ணையை கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்தில் முன்னர் ஆமணக்கு எண்ணையை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/siW7RK8XKFkFcRuK6lCA.jpg)
செம்பட்டை முடி மாறுவதற்கு காலை உணவில் செம்பருத்தி பூ அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/20/RY2AqPxjbtbIs4oA6WLa.jpg)
தினமும் தேங்காய் பால் முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும்.
/indian-express-tamil/media/media_files/zpPzgHqEuEMg9MgagGSv.jpg)
ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தாலும் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருப்பு கலராகும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/10/0P9sO4BqJwYBKbAgKBmQ.jpg)
ஒரு கப் தேங்காய் பாலில் ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து சாறு எடுத்து கலக்கி அதை கூந்தலின் வேர்க்கால்களில் படும் படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து சாதாரண குளிர்ந்த நீரில் தலையை அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/b47a4ZAIaxUmCJiPOpnJ.jpg)
சின்ன வெங்காயத்தை மை போல் அரைத்து கூந்தலின் மயிர் கால்களில் படும்படி தேய்த்து குளித்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். நாட்டு வெங்காயத்தை (சின்ன வெங்காயம்) அரைத்து முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
/indian-express-tamil/media/media_files/gJwip8LxGfZdGmx6VtMJ.jpg)
50 கிராம் வெந்தயத்தை ஊறவைத்து மைய அரைத்து, அதனுடன் அயோடின் உப்பு 2 டீஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் நாலு டீஸ்பூன் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வது நாளடைவில் தடுக்கப்பட்டு முடி நன்கு வளரும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/JmoHgwqYwAcTtjeFpCwk.jpg)
துவரம் பருப்பை முதல் நாள் ஊறவைத்து மறுநாள் நீர் வடித்து எடுத்து பால் சேர்த்து அரைத்து தலையில் பேக் மாதிரி போட்டு அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/Kkb0yIJ9TexZmda3cDoA.jpg)
பசுமையான கருவேப்பிலையை, பால் விட்டு மைய அரைத்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலையை வெறும் நீரில் கழுவிவர முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி நன்றாக செழித்து வளரும்.
/indian-express-tamil/media/media_files/2Mm9a7dHth3Cv1wbtCZ5.jpg)
தயிரை தலைக்குத் ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.