/indian-express-tamil/media/media_files/2025/05/01/gHHAyni6v0KUc4qLfgqA.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/screenshot-2025-05-01-143951-678299.png)
நடிகர் அஜித் தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, அஜித்துக்கு மிகவும் விலை உயர்ந்த பைக் ஒன்றை பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/screenshot-2025-05-01-143946-800691.png)
அஜித் குமார் சமீபத்தில் தனது குட் பேட் அக்லி படத்திற்காக பிரபலமடைந்தார் . இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக ஓடி வருகிறது மற்றும் வெற்றிகரமாக 150 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பழம்பெரும் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது நிகர மதிப்பு மற்றும் உடல்நலம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/screenshot-2025-05-01-144005-762980.png)
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித்துக்கு சினிமா மட்டும் இல்லாமல், பைக் ரேஸ், கார் ரேஸ், பைக்கில் நாடு நாடாக சுற்றுவது, துப்பாக்கி சுடுவது, புகைப்படங்கள் எடுப்பது என அவரது ஆர்வத்துக்கு எல்லாம் தீனி போட்டுக் கொண்டுதான் உள்ளார். தனது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக, தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக மாறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/screenshot-2025-05-01-143957-945644.png)
இப்படியான நிலையில் அஜித் குமார் இன்று அதாவது மே 1ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள், அஜித் குமாரின் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் இவரது பிறந்த நாள் தொடர்பான போஸ்ட்கள் குவிகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/vyIp18cO1tC2KUDMs3Ct.jpg)
அவரது பிறந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க தேசிய மரியாதையைப் பெற்றபின்-இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருது பத்ம பூஷன், அவருக்கு ஏப்ரல் 28 அன்று புதுதில்லியில் ஜனாதிபதி த்ரூபாடி முர்மு வழங்கினார். இந்திய சினிமா மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு தனது பங்களிப்புகளைக் கொண்டாடும் ஒரு வாழ்த்துச் செய்தியையும் அவரது குழு பகிர்ந்து கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.