சளி முதல் காய்ச்சல் வரை... இந்த ஒரு மூலிகை போதும்; வசம்பின் நன்மைகள் இதோ!
இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு. இதுபோன்ற பல மருத்துவ குணங்களை வசம்பு உள்ளடக்கி உள்ளது. இதன் மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்
இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு. இதுபோன்ற பல மருத்துவ குணங்களை வசம்பு உள்ளடக்கி உள்ளது. இதன் மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்
வசம்பு, ஒரு மூலிகை, பல மருத்துவ பயன்கள் கொண்டது. இது உடலைச் சுத்தமாக்குதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்தல், புதையல் நோய்களை குணமாக்குதல் போன்ற பல நன்மைகளை அளிக்கிறது.
2/5
இருமல் நரம்பு தளர்ச்சி,வாய்நாற்றம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது வசம்பு.வசம்பை தூளாக்கி வெட்டு காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும். வசம்பை சுட்டு தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் தடவினால் உப்புசம் குறையும்.
3/5
சுட்டு தூளாக்கிய வசம்பை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்க பசி ஏற்படும், நன்கு பால் குடிக்கும்.குழந்தைகளை குளிப்பாட்டியதும் வசம்பை சுட்டு அரைத்து கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றிலும் பூசி வர எந்த ஒரு நோய்களும் அண்டாது.
Advertisment
4/5
ஒரு துண்டு வசம்பு ஒரு துண்டு மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து கன்னம்,கழுத்தில் ஏற்படும் வீக்க நோய்க்கு பற்று போட விரைவில் குணமாகும்.வசம்பு அதிமதுரம் சேர்த்து நீரை காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் காய்ச்சல் சளி அனைத்தும் நீங்கும்.
5/5
காசு கட்டியுடன் ( நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ) சிறிது வசம்பு சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்று போட கீழ்வாத நோய் நீங்கும். பசுமை அம்மியில் வைத்து தூள் செய்து சிறிதளவு தேனில் குறைத்து அதிகாலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் தீக்குவாய் குணமடையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news