காலை நேரம் எழுந்ததும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை பருகுவது நம் செரிமான அமைப்புக்கு நன்மை அளிக்கும். கற்றாழை தாவரத்தில் காணப்படும் நொதிகளானவை கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவுகின்றன. இதன் மூலம் உணவுகள் செரிமானமாவதை எளிதாக்குகின்றன. செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கக் கற்றாழை ஜூஸ் உதவும்.