/indian-express-tamil/media/media_files/2025/05/17/7n5ixaVL86kLjEewRB6D.jpg)
/indian-express-tamil/media/media_files/3LmxI79rHfLVMKQcUbQL.jpg)
முடி உதிர்வு பிரச்சனைக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், சளி தொல்லை போன்ற பாதிப்புகளுக்காக மருத்துவர்களிடம் செல்பவர்களை விட, இன்றைய சூழலில் முடி உதிர்வு காரணமாக மருத்துவர்களிடம் செல்பவர்கள் அதிகம்.
/indian-express-tamil/media/media_files/PrOaNpGkioFj2DK0I3DU.jpg)
தலை முடி அதன் உறுதித் தன்மையை இழக்கும் போது தான் உதிரத் தொடங்குகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை போன்றவற்றால் முடி உதிர்வு ஏற்படலாம். மேலும், வேறு ஏதாவது உடல் நல பிரச்சனைக்கு நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக் கொண்டாலும் முடி உதிர வாய்ப்பு இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/vlkbg9babjpXM22ETdE7.jpg)
அந்த வகையில், தலை முடியை சீராக பராமரித்தால் உறுதியாக இருக்கும். இதற்காக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஹேர்பேக்கை பயன்படுத்தலாம். இரசாயனங்கள் கலந்த செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட ஹேர்பேக்கை பயன்படுத்துவதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஹேர்பேக்கை பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/QaVFrrrasz5DPYN9n6sL.jpg)
இதற்காக இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். அதன்படி, கருப்பு உளுந்தை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை நம் தலை முடிக்கு தேவையான அளவு எடுத்து, அதனை கெட்டியாக இருக்கும் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் நம் தலை முடிக்கான ஹேர்பேக் தயாராகி விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/17/0YGcGhhhY642eYzsbfNn.jpg)
இதை தலை முடி முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இந்த ஹேர்பேக் பயன்படுத்தும் போது ஷம்பூ அல்லது சீவக்காய் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது நம் தலை முடி உறுதியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.