உப்புக்கறை படிந்த வாளிகளை சுத்தம் செய்வது முதல் கசக்கும் வெள்ளரிக்காய் வரை, உங்கள் வீட்டு வேலைகளை எளிதாக்கும் பயனுள்ள குறிப்புகள் இதோ
2/7
வெள்ளரிக்காயின் கசப்பை நீக்க
வெள்ளரிக்காயின் இரு முனைகளையும் சிறிதளவு வெட்டிவிட்டு, வெட்டிய பகுதியால் தேய்க்கவும். அப்போது வெளியாகும் வெள்ளை நிற ஜெல் கசப்பை உண்டாக்கும். அதை நீக்கிவிட்டால் வெள்ளரிக்காய் சுவையாக இருக்கும். மறுமுனையிலும் இதையே செய்யவும்.
3/7
மிளகாய்த்தூள் கெடாமல் இருக்க
உங்கள் மிளகாய்த்தூளில் சிறிதளவு உப்பு கலந்து வைத்தால், அது நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாகவும், நிறம் மாறாமலும், காரம் குறையாமலும் இருக்கும்.
புளியில் இருக்கும் விதைகள் மற்றும் நாரை நீக்கிவிட்டு, ஒரு ஜாடியில் போட்டு மேலே உப்பு தூவி மூடி வைக்கவும். இதனால் புளியை பூச்சிகள் அரிக்காது.
புளியை வெந்நீரிலோ அல்லது சாதம் வடித்த தண்ணீரிலோ சில நிமிடங்கள் ஊற வைத்தால், அது விரைவில் மென்மையாகிவிடும்.
5/7
உப்புக்கறை படிந்த வாளியை பளிச்சென சுத்தம் செய்ய
1. பேக்கிங் சோடா மற்றும் டெட்டால் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கலந்து பேஸ்ட் ஆக்கவும். இந்த பேஸ்டை உப்புக்கறை படிந்த வாளியில் தடவி, ஸ்டீல் ஸ்கரப்பர் கொண்டு தேய்த்து கழுவினால் வாளி பளபளப்பாகிவிடும்.
2. உப்பு மற்றும் பாத்திரம் கழுவும் திரவத்தை கலந்து உப்புக்கறை மீது தேய்த்து கழுவினால் வாளி சுத்தமாகிவிடும்.
6/7
முட்டைகோஸை மெல்லியதாக நறுக்க
முட்டைகோஸை பொடியாக நறுக்க கத்திக்கு பதிலாக பீலரைப் பயன்படுத்தலாம். இது மெல்லியதாகவும், சீராகவும் நறுக்க உதவும்.
Advertisment
Advertisements
7/7
பூண்டை எளிதாக உரிக்க
பூண்டு பற்களை லேசாக வாணலியில் வறுத்து, பின்னர் ஒரு காட்டன் துணியில் போட்டு தேய்த்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.