Advertisment

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஒரு மாதம் நிறைவு; போர் நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஒரு பார்வை

ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்டெரெஸ், ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க அக்டோபர் 16-ம் தேதி அழைப்பு விடுத்தார்.

author-image
WebDesk
New Update
Israel-Hamas war 1

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஒரு மாதம் நிறைவு

1/18

Advertisment

Israel-Hamas war 1

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய போராளிகள் அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் நாட்டிற்குள் வீசி, பாலஸ்தீனியத்தை ஆளும் ஹமாஸ் ஒரு புதிய நடவடிக்கையின் தொடக்கத்தை அறிவித்தது. (ஏ.பி. புகைப்படம்)

ஆங்கிலத்தில் படிக்க: A month of Israel-Hamas war: A recap of the conflict in pictures

2/18

Israel-Hamas war 2

ராணுவத்தை நிரந்தரமாக தயார் நிலையில் வைத்திருக்கும் இஸ்ரேல், திருப்பித் தாக்குவதற்கு நேரத்தை வீணடிக்கவில்லை, காஸாவில் உள்ள இலக்குகளை நோக்கி தனது ராக்கெட்டுகளை வீசி போர் எச்சரிக்கை நிலையை அறிவித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் ஊடகங்களிடம் கூறுகையில்,  “ஹமாஸ் போரை ஆரம்பித்துள்ளது, இஸ்ரேல் வெல்லும்” என்று கூறினார். (ஏ.பி. புகைப்படம்)

3/18

Israel-Hamas war 3

காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, “போர் இன்றுடன் ஒரு மாத நிறைவடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 4,100-க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 10,000-ஐத் தாண்டியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் வன்முறையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில், அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். 242 பேர் போராளிக் குழுவால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். (ஏ.பி. புகைப்படம்)

4/18

Israel-Hamas war 4

போர் தொடங்கிய ஆறாவது நாளில், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களையும் தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக 24 மணி நேரத்திற்குள் தெற்கே இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்தது. (ஏ.பி. புகைப்படம்)

5/18

Israel-Hamas war 5

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அக்டோபர் 12-ம் தேதி டெல் அவிவ் வந்தடைந்தார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது,  “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிக்க ஒரு உலகளாவிய கடமை உள்ளது” என்று கூறியது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இந்தியா தனது பாரம்பரிய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான பாலஸ்தீனத்தை நிறுவுவதற்கான நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தது. (ஏ.பி. புகைப்படம்)

6/18

Israel-Hamas war 6

அடுத்த நாள், தெற்கு லெபனானில் எல்லையில் நடந்த மோதல்களை உள்ளடக்கிய சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் ஷெல் தாக்குதலில் இறங்கியது, இதில் ராய்ட்டர்ஸ் வீடியோகிராஃபர் இஸ்ஸாம் அப்துல்லா கொல்லப்பட்டார், மேலும் ஆறு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். (ஏ.பி. புகைப்படம்)

7/18 

Israel-Hamas war 7

ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்டெரெஸ், ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க அக்டோபர் 16-ம் தேதி அழைப்பு விடுத்தார். காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரைவாகவும் தடையின்றி அணுக அனுமதிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தினார். (ஏ.பி. புகைப்படம்)

8/18

Israel-Hamas war 8

காஸாவிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் அடுத்த நாள் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கு இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலே காரணம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ரஷ்ய தீர்மானத்தை ஐ.நா. நிராகரித்தது. (ராய்ட்டர்ஸ் புகைப்படம்)

9/18

Israel-Hamas war 9

அக்டோபர் 18-ம் தேதி இஸ்ரேலுக்கான விரைவான பயணத்தை முடித்துக்கொண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நேடன்யாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். , அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வருகையைத் தொடர்ந்து, தெற்கு காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எகிப்திலிருந்து வரம்புக்குட்பட்ட உதவிகளை இஸ்ரேல் அனுமதித்தது. இந்த படத்தில், காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுவீச்சில் காயமடைந்தவர்களுடன் பாலஸ்தீனிய ஆம்புலன்ஸ்கள் எகிப்துவின் எல்லையைக் கடக்கும் இடத்துக்கு வந்தடைகின்றன. (ஏ.பி. புகைப்படம்)

10/18

Israel-Hamas war 10

அக்டோபர் 20-ம் தேதி காசாவில் பிணைக் கைதியாக இருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணையும் அவரது டீன் ஏஜ் மகளையும் ஹமாஸ் விடுவித்தது. அக்டோபர் 7-ம் தேதி தீவிரவாதக் குழுவின் வெறித்தனத்தின் போது இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 200 நபர்களில் ஒரு விடுதலையின் முதல் நிகழ்வு இதுவாகும். (ஏ.பி புகைப்படம்)

11/18

Israel-Hamas war 11

எகிப்துக்கும் காசாவிற்கும் இடையிலான ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி அக்டோபர் 21-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது, இஸ்ரேல் எல்லையை மூடிய பிறகு முதல் முறையாக பாலஸ்தீனியர்களை அடைய மிகவும் தேவையான உதவிகளை அனுமதித்தது. (ராய்ட்டர்ஸ் புகைப்படம்)

12/18

Israel-Hamas war 12

85 வயதான யோசேவ்ட் லிஃப்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) மற்றும் மற்றொரு பெண் பாலஸ்தீனிய பகுதியில் இரண்டு வார சிறைவாசத்திற்குப் பிறகு அக்டோபர் 24-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அந்த இரண்டு பணயக்கைதிகளும் காசாவில் இருந்து எகிப்திற்குள் ரஃபா கடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டதை எகிப்திய தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த டெல் அவிவ் வந்தடைந்தார். (ஏ.பி. புகைப்படம்)

13/18

Israel-Hamas war 13

அக்டோபர் 27-ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தின் மீது ஐநா பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை. ‘ஹமாஸ்’ மற்றும் ‘பணயக்கைதிகள்’ என்ற வார்த்தைகள் இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்த வாக்கெடுப்புக்கு முன், கனடாவால் முன்மொழியப்பட்ட உரைக்கு ஹமாஸ் என்று பெயரிடப்பட்ட திருத்தம், அங்கிருந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறியதால் நிராகரிக்கப்பட்டது. மற்ற 86 நாடுகளுடன் இந்தியாவும் இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

14/18

Israel-Hamas war 14

இணையம் மற்றும் மொபைல் சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் அக்டோபர் 28-ம் தேதி வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி பதுங்கு குழிகளில்  குண்டுவீசின. இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரின் புதிய கட்டத்தில் நுழைந்தது. இஸ்ரேல் ராணுவம் காசாவிற்கு தரைப்படைகளை அனுப்புவதன் மூலமும் தரை, வான் மற்றும் கடலில் இருந்து தாக்குதல்களை தீவிரப்படுத்துவதன் மூலமும் இந்த மோதலில் இரண்டாம் கட்டத்தை திறந்துள்ளது. (ஏ.பி. புகைப்படம்)

15/18

Israel-Hamas war 15

லெபனானின் ஹெஸ்பொல்லா நவம்பர் 4-ம் தேதி லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. தெற்கு லெபனானில் வசிப்பவர்கள் சில வாரங்களாக எல்லை தாண்டிய மோதல்களின்போது இன்னும் சில கடுமையான இஸ்ரேல் தாக்குதல்கள் குறித்து புகாரளித்தனர். (ஏ.பி. புகைப்படம்)

16/18

Israel-Hamas war 16

நவம்பர் 5-ம் தேதி மத்திய காசா பகுதியில் உள்ள மகாசி அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரமல்லாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில் உடனடியாக இஸ்ரேல் போர்நிறுத்தத்தை கோரினார், அதே நேரத்தில் காசாவின் சுகாதார அமைச்சகம் ஒரே இரவில் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் டஜன் கணக்கானவர்கள் இறந்ததாகக் கூறியது. (ஏ.பி. புகைப்படம்)

17/18

Israel-Hamas war17

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாகு செவ்வாய்க்கிழமை ஹமாஸுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர், காசா பகுதியின் மீது ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பு, காலவரையற்றதாக இருக்கும் என்று கூறினார். காசாவில் உதவிகள் அல்லது பணயக்கைதிகள் வெளியேறுவதை எளிதாக்கும் சண்டையில் தந்திரோபாய சிறிய இடைநிறுத்தங்களை பரிசீலிப்பதாக அவர் கூறினார். ஆனால், அவர் மீண்டும் ஒரு பொதுவான போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்தார். (ஏ.பி. புகைப்படம்)

18/18

Israel-Hamas war 18

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஈரான் அதிபர் செய்யத் இப்ராஹிம் ரைசியுடன் பேசினார். மேலும், இரு தலைவர்களும் விரிவாக்கம், தொடர்ச்சியான மனிதாபிமான உதவி மற்றும் அமைதியை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். (ஏ.பி. புகைப்படம்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment