நிறைய மொட்டு விடும்; கணக்கில்லாமல் பூத்துக் குலுங்கும்... மல்லிகை செடிக்கு இந்த உரம் கொடுத்துப் பாருங்க!
மல்லிகைச் செடியை நன்றாக பூக்க வைப்பதற்கு எளிமையான முறையில் வீட்டிலேயே உரம் தயாரிப்பது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
மல்லிகைச் செடியை நன்றாக பூக்க வைப்பதற்கு எளிமையான முறையில் வீட்டிலேயே உரம் தயாரிப்பது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் முதன்மையான இடத்தை பெறுவது மல்லிகை தான். இதன் காரணத்தினால் வீட்டில் மல்லிகைச் செடி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த வகையில் மல்லிகை செடியை நன்றாக பூக்க வைப்பதற்கு சிம்பிள் டிப்ஸை இதில் காணலாம்.
2/5
மல்லிகைச் செடியை எப்போதும் வெயில் படும் இடத்தில் வைப்பது அவசியம். மல்லிகைச் செடியில் பூ பூத்ததும், அதனை உடனடியாக மொட்டுடன் சேர்த்து பறிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த கிளைகளில் இருக்கும் இலைகளையும் பறித்துப் போட வேண்டும்.
3/5
மல்லிகைச் செடிகள் பெரும்பாலும் ஈரப்பதத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் வேர்ப்பகுதியை அதிகமாக காய விட்டால், சரியாக பூக்காமல் இருக்கும். எனவே, எப்போதும் சரியான அளவில் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்
Advertisment
4/5
இது தவிர வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மல்லிகை செடிக்கு உரம் தயாரிக்கலாம். இதற்காக நான்கு முதல் ஐந்து எலுமிச்சை பழத்தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பின்னர், இத்துடன் கூடுதலாக ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீரை செடி முழுவதும் தெளிக்க வேண்டும்.
5/5
இந்தக் கரைசலை பயன்படுத்தும் போது, மல்லிகைச் செடியில் பெரிய அளவில் பூக்கள் பூக்கத் தொடங்கும். மேலும், பூச்சிகளும் வராது. எனவே, வீட்டில் மல்லிகை செடி வளர்ப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news