/indian-express-tamil/media/media_files/2025/08/17/jothika-nakma-12-2025-08-17-13-22-14.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/17/jothika-nakma-2025-08-17-13-22-14.jpg)
பிரபல நடிகைகளான நக்மா, ஜோதிகா இருவருக்கும் உள்ள உறவுமுறையைப் பற்றிப் பலருக்கும் குழப்பம் உண்டு. பலரும் அவர்களை உடன்பிறந்த சகோதரிகள் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அவர்கள் ஒன்றுவிட்ட சகோதரிகள். இந்த இருவரின் உறவுமுறை குறித்த உண்மைத் தகவலைப் பற்றி இப்போது பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/jothika-nakma-13-2025-08-17-13-22-14.jpg)
நக்மாவின் தாயார் சீமா, முதலில் அரவிந்த் மொரார்ஜி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்தான் நக்மா. அதன் பிறகு, சீமா தனது முதல் கணவரைப் பிரிந்து தயாரிப்பாளர் சந்தர் சதானாவைத் திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/jothika-nakma-14-2025-08-17-13-22-14.jpg)
சந்தர் சதானா மற்றும் சீமா தம்பதியருக்குப் பிறந்தவர்தான் ஜோதிகா. ஜோதிகாவுக்கு ரோஷினி என்ற ஒரு உடன்பிறந்த சகோதரியும் இருக்கிறார். ரோஷினி, 1998-ல் வெளியான 'துள்ளித் திரிந்த காலம்' படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொத்தம் ஆறு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். நக்மாவைப் போலவே, இவரும் நடிப்பிலிருந்து விலகிவிட்டார். தற்போது, நக்மா மற்றும் ரோஷினி இருவரும் நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார்கள். ஜோதிகா மட்டும் தொடர்ந்து தனது கவனமான திரைக்கதை தேர்வுகளுடன் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.