/indian-express-tamil/media/media_files/2025/04/14/LuLKPf7n0j3FqqBdpCgD.jpg)
/indian-express-tamil/media/media_files/yPZTae7jq8LKoAU0rqvz.jpg)
சினிமா பிரபலங்களை பார்க்கும் போது அவர்கள் எப்போதும் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதை போன்று காட்சியளிப்பார்கள். இதற்காக மேக்-அப் போட்டுக் கொண்டாலும், இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே புத்துணர்ச்சி சாத்தியப்படும்.
/indian-express-tamil/media/media_files/iD9UB79Ra8kBZK6tNV1c.jpg)
அதனடிப்படையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் ஒரு ஜூஸ் குறித்து தெரிவித்துள்ளார். இந்த ஜூஸை, நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களை முதலில் காணலாம்.
/indian-express-tamil/media/media_files/ljHl3kwf1OqpudSNAsxe.jpg)
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை, செலரி, எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய், பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/EYDAVvjx3MUTNOcMLf36.jpg)
முதலில் பாலக் கீரையை சுடுதண்ணீரில் லேசாக ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு இத்துடன் செலரி, சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா, 2 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/oK1EvhHnOg4L5D9pO8hw.jpg)
இப்படி செய்தால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்தான பானம் ரெடியாகி விடும். இதில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றன. இதனை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.