உருளைக்கிழங்கு வாங்கியவுடன் சில நாட்களில் முளைவிட்டு வீணாகி விடுவது பொதுவானது. இதை தவிர்க்க, உருளைக்கிழங்குகளுடன் பூண்டு பற்களை சேர்த்து வைக்கவும். பூண்டு, உருளைக்கிழங்கின் முளைக்கும் தன்மையை கட்டுப்படுத்தி, நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க உதவும்.
2/4
பாமாயிலை சுத்திகரிக்கும் முறை
ரேஷன் கடைகளில் இருந்து வாங்கும் பாமாயிலை நேரடியாக பயன்படுத்துவது நல்லதல்ல. அதை சுத்திகரிக்கும் எளிய முறை இங்கே: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாமாயிலை ஊற்றவும். ஒரு சிறிய தட்டில் சிறிதளவு புளியையும், கல் உப்பையும் எடுத்து நன்றாக உருண்டையாக பிடித்துக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும், இந்த புளி உருண்டையை எண்ணெயில் சேர்க்கவும். புளியின் நிறம் கருப்பாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எண்ணெயை வடிகட்டி பயன்படுத்தவும். இந்த முறை பாமாயிலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
3/4
அரிசியில் வண்டு, புழு வராமல் இருக்க
அரிசியில் வண்டு மற்றும் புழுக்கள் வருவது ஒரு தொல்லை. இதை தவிர்க்க, அரிசி சேமிக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தூள் மற்றும் தூள் உப்பை ஒரு டிஷ்யூ பேப்பரில் மடித்து வைக்கவும். இந்த கலவை அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க உதவும்.
Advertisment
4/4
தேங்காய் பூசணம் பிடிக்காமல் இருக்க
வெட்டிய தேங்காய் சில சமயங்களில் பூசணம் பிடித்து வீணாகிவிடும். இதை தவிர்க்க, வெட்டிய தேங்காயுடன் சிறிதளவு தூள் உப்பை சேர்த்து நன்றாக குலுக்கி, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்த முறை தேங்காய் காய்ந்து போவதையும், பூசணம் பிடிப்பதையும் தடுக்கும்.