கெமிக்கல் ஷாம்பூவிற்கு பதிலாக இயற்கையான பூந்திக்கொட்டையை வைத்து தயாரிக்கப்படும் ஷாம்பூ தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
செய்முறை
பூந்திக்கொட்டைகளை எடுத்து, அவற்றின் விதைகளை நீக்கிவிடவும். வெறும் தோலை மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க வைத்து நன்றாக கரைந்து, சோப்பு போன்ற நுரை வர ஆரம்பிக்கும்.
அது சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு ஒரு மெல்லிய துணியால் அல்லது வடிகட்டியால் வடிகட்டி நீரை மட்டும் எடுத்துட் தலையில் தேய்த்து குளிக்கலாம்.
Advertisment
Advertisements
பூந்திக்கொட்டை ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி. இதில் இரசாயனங்கள் இல்லாததால், இது தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் மென்மையானது. இது தலைமுடியில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசிகளை திறம்பட நீக்குகிறது.
பூந்திக்கொட்டையில் உள்ள இயற்கையான சபோனின்கள் (saponins) மென்மையான சுத்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன, இதனால் இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியை குறைக்க உதவும். பூந்திக்கொட்டை முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வை குறைக்க உதவும்.
இதன் இயற்கையான சுத்தப்படுத்தும் தன்மை பொடுகை அகற்றவும், உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். பூந்திக்கொட்டை ஷாம்பூவை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி இயற்கையான பளபளப்பை பெறும்.
இரசாயனங்கள் இல்லாததால், இது சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். இரசாயன ஷாம்பூகளுக்கு பதிலாக இந்த இயற்கையான பூந்திக்கொட்டை ஷாம்பூவை பயன்படுத்துவது தலைமுடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். இது தலைமுடியை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் இயற்கையான தன்மையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.