சிவராத்திரி வழிபாடு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி

கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை பக்தர்களுக்கு தொடர் தரிசனம் வழங்கப்படும்.

கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை பக்தர்களுக்கு தொடர் தரிசனம் வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
Madurai Sivarathiri

சிவராத்திரியை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை பக்தர்களுக்கு தொடர் தரிசனம் வழங்கப்படும்.

Advertisment

இத்தகைய ஏற்பாடு காரணமாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஏழு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும். மேலும், 26ம் தேதி மாலைக்குள் பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று, சிவராத்திரி சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ளலாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: